ஒலிபெருக்கி

இருள் நமக்கே நமக்காக
அருளிய உலகம் அது

விண்ணையும் மண்ணையும்
இருபுறமும் தாங்கி நிற்கும்
தூணாய்க் காற்றுச் சுழற்சி மட்டும்

வெறும் ஒலிகளாய் மட்டுமே

உயிர்த்திருக்கின்றன
எல்லா இயற்கை உயிரிகளும்

தங்கள் இருப்பைப் பறைசாற்றும்
செயலாக
ஒலிபெருக்கிக்கொள்கின்றன
ஒளியிழந்த அவை

நமது பார்வையால் துளையிட்டுத்
தொலைக்க முடிகிறது
மீறலின் சுவை வேண்டும்
சில மனிதக் குமிழிகளை

இரவு கவிந்துகிடக்கும்
நிலச் சேற்றில்
கால் வைத்த
அந்தக் கணத் தடுமாற்றத்தில்
கைகள் பற்றிக்கொண்டன
காணாத உடலில் கைகளா அவை?
ஆன்மாக்கள் தீண்டிக்கொள்வதில்
இறைவனுக்குப் பெருமகிழ்ச்சி

The post ஒலிபெருக்கி first appeared on சுஜா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 01, 2023 18:47
No comments have been added yet.


சுஜா's Blog

சுஜா
சுஜா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சுஜா's blog with rss.