பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார். ‘எனது ஆண்கள்’ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது. பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும்.
ஆண்கள் வெறும் பொம்மைகள் போல , பெண்களில் இருக்கும் மோகம், காமம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் , பெண்கள் அவர்களை கைபொம்மைகள் போல பயன் படுத்த , கெடுக்க படுவதற்கும் கெட்டு போவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.