ஈழத்தின் நிகழ்வுகள், தமிழகத்தின் எதிர்வினைகள் ஆகியவற்றை ஊடும் பாவுமாகக்கொண்ட தமிழ்நதியின் அரசியல் கட்டுரைகள் இந்நூலின் முதல் பகுதி. 'வேரிழந்து சென்றவர்கள், விழுதுகளுடன் திரும்பி வரும்' அனுபவங்களையும் சொந்த மண்ணில் அந்நியவளாகப் பயணம் செய்யும் வலியின், அவமானத்தின் பதிவுகள் இரண்டாம் பகுதி. ஈழத்து அரசியல் நிகழ்வுகள் தொடர்பான இலக்கியப் பிரதிகளை அன்றைய அரசியல் சூழலில் பதித்து வாசிக்கும் இலக்கிய / அரசியல் விமர்சனங்கள் இந்நூலின் இறுதிப்பகுதி.
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, ரொறன்ரோ-தமிழகம்-ஈழம் என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.
வெளிவந்த நூல்கள் நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்) சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள், ஓகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்) இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்) கானல் வரி (குறுநாவல்) ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்) பார்த்தீனியம் (நாவல், 2016)
Wish this book would be translated so that the non-tamils would understand the sufferings of the Tamils in Sri Lanka. At least after reading this book, the people who are telling the Tamils are suffering because they killed bloody Rajiv Gandhi would come to know it has nothing to do with that traitor, it's about humanity.