ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருந்தகை, சைவம் தழைக்க அவதரித்த தவமுனி. அன்னாரின் ‘சிவபுராணம்’ எனும் சிறிய, அரிய நூல் பலராலும் மனமாரப் பயிலப்பட்டு, பாடப்பட்டு, கேட்கப்பட்டு அதனால், பயிலுவோர், பாடுவோர், கேட்போர் எல்லோருடைய மனதிலும் ஆன்ம விளக்கினை ஏற்றி, அமைதியும், உண்மைச் சுகமும் தந்து உதவுகின்ற பெருநிதியம். மாணிக்கவாசகப் பெருந்தகையின் திருவாசகப் பாடல்களில், இத்தகைய வைராக்ய வேட்கையும், அதனால் தன்னை ‘நாயேன்’ எனத் தாழ்த்திக் கொள்ளும் அடக்கமும் விளங்கும்.அறவழியில் வாழ்ந்து அதனால் பண்பான வாழ்க்கை வாழும் நல்லோர்கள், ‘விவேகம்’ எனும் பகுத்தறியும் பண்பினால், எது உண்மை, எது பொய், எது மெய்யின்பம், எது துயரம் என்றெல்லாம் தக்க வினாக்களினால் தாக்கப்பட்டு, &