சிறுவயல் கிராமத்தில் தாளமுத்து மற்றும் காலகேயன் எனும் இரு குடும்பத்தினரும்,அவரவர் வீட்டில் நடந்த பிள்ளைகளின் கொலையாலும்,தொழில் போட்டியாலும் ஜென்மப் பகையாளியாக மாறுகின்றனர்.
அப்படியான குடும்பத்தின் இளைய வாரிசுகள் இரண்டுபேர் காதலித்துத் திருமணம் செய்துகொள்கின்றனர்.அவர்களை விரட்டி விரட்டி கொல்லத்துடிக்கும் குடும்பத்தினரிடமிருந்து காப்பாற்றி பாதுகாக்கிறான் குடும்பத்தின் மூத்தவாரிசான மாறன் சேதுபதி.
அதன்பின் நடக்கும் இருகுடும்பத்திற்கிடையேயான சண்டைகளும்,திருமணமும்,காதலும்,மோதலும்தான் முரண் தீர்க்கும் பிணையே நாவல்.கிராமத்துக் கதை.