“அர்த்தமற்ற இந்துமதம்” என்னும் இந்நூலை திரு.கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்” என்ற நூலுக்கு மறுப்பாக எழுதினேன். 1979ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்டது. திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராய் இருந்தபோது, திரு.கவிஞர் கண்ணதாசன் அவர்கள், தமிழ்நாடு அரசின் அரசவைக் ஆஸ்தான கவிஞராக இருந்த நிலையில், எனது “அர்த்தமற்ற இந்துமதம்” வெளியிடப்பட்டு தமிழ்நாடு அரசால் அரசு நூலகங்களுக்கு வாங்கப்பட்டது பெருமைக்கும், சாதனைக்கும் உரியதாகும். பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்ட இந்நூலை வாங்கிச் சென்ற மலேசிய தோழர் திரு.நாரண.