I hate all women because they deny me sex...
சாரு தன் தபால்துறை அனுபவங்களை, அதிகாரிகள் சகா மனிதன் மீது செலுத்தும் அடக்குமுறைகளையும், அதனால் தனி மனிதன் படும் அவமானங்களையும் தனக்கே உரிய humourஉடன் பல கதைகளாக நாவலின் முதல் பகுதியான கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின் குறிப்புகளில் வருகிறது.
நாவல் non -linear ரில் செல்கிறது. ஒரு கதை - அதற்குப் பின் குறிப்பு அந்தப் பின் குறிப்பிற்கு வேறொரு பின் குறிப்பிற்கு மற்றொரு பின்குறிப்பு. இப்படியாக labyrinth உள்ளே மாட்டிக்கொண்டார் போல் தான் இருக்கிறது. மற்றொரு அத்தியாயம் நடுவாக்கியத்தில் இருந்து ஆரமிக்கிறது, கதை வளர்ந்து மறுபடியும் ஆரமித்த இடத்திற்கே வந்து முடிகிறது.
நாவலில் ஒரு இடத்தில் கண்ணாயிரம் பெருமாளுக்கு தன்மீது ஒரு லாரி மலம் விழுறாப்போல கனவு வருகிறது அலறிஅடிச்சு எழுந்திக்கிறாரு மனைவி என்ன ஏதுன்னு கேட்க
"ஒண்ணும் இல்ல பேய் கனவு"
"இந்த காலத்துல போய் பேய் பிசாசுன்னுட்டு"
இங்க மலத்தைச் சாதியின் குறியீடே வச்சிட்டு மனைவி கேட்டதை மறுபடியும் வாசிச்சு பார்த்த சமகாலத்து மேல்தட்டு சாதிய ஒடுக்குமுறைக்கு சொல்ற மறு மொழியவே தெரியுது.
இனி நாவலில் இருந்து சில பகுதிகள்
க.பெருமாள் நண்பர்கள் கூட காரசாரமா பேசிட்டு இருக்கும்போது
"நான் குடிக்கிறதை நிறுத்திட்டேன்"
"என்ன? எப்போல இருந்து?"
"இரண்டு நாளா"
க.பெருமாளுக்கு பிடிக்காதவனு ஒரு பட்டியல் அதை வைத்து ஒரு கதை. ஆனா அந்தப் பட்டியலே ஒரு சுவாரசியமான ஒன்று
இந்திய, இந்தியர்கள், பிச்சைக்காரன்,.. பெண்ணியவாதி, anti - phedophile , பெண் கவிஞர்கள் இத்தியாதி இத்தியாதி political correctness , அர்த்தம். இதுல highlight யே கடைசி இரண்டு தான்.
IAS interview :
‘ஓ... உங்கள் ஊரில் மற்றொரு விசேஷமும் உள்ளதே, தெரியுமா?’
‘இல்லையே...’
‘விவேகானந்தர் உங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்...’
‘ஓ...’
‘என்னது, எல்லா கேள்விகளுக்கும் ஒரு மாதிரியாக பதில் சொல்கிறீர்கள்? விவேகானந்தர் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’
‘அவரைப் பற்றி எனக்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை...’
‘நீங்கள் என்ன நாஸ்திகரா?’‘
‘ஆமாம்...’
‘சரி, மும்மொழித் திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?’
‘அது சரியல்ல. இந்தி மொழி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் திட்டம் அது.’
‘என்னது, இந்தி மொழி ஆதிக்கமா... என்ன பேசுகிறீர்கள் நீங்கள்? உங்களைப் பார்த்தால் நக்ஸலைட் போலத் தெரிகிறது. உங்களை எப்படி அய்யாரெஸ்ஸில் விட்டார்கள்?’
இந்தப் பகுதியில் கவனிக்க வேண்டியது
விவேகானந்தர் - இந்தி மொழி. இதில் இருந்தே இது ஒரு வட இந்திய இந்துத்துவ அதிகாரிகள்னு சொல்லிடலாம்.
நாவலில் மற்றொரு பகுத்து :
வளையல் உருட்டும் சிறுவர்கள் தினமும் 16 மணி நேரம் உருட்டுகிறார்கள். தினக் கூலி 30 ரூபாய். ‘தேவடியாப் பசங்க. குளிப்பதுகூட கிடையாது. அந்த நேரத்திலும் வளையல் உருட்டி காசு சம்பாதிக்கலாம் என்று பார்க்கிறார்கள்’ என்றார் மேலாளர்.
‘I really love women. My enthusiasm for pussy is one of my few remaining recognisable, fully human qualities.’