Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
பேராசிரியர் தொ.பரமசிவன் அவரின் ஆய்வு, தமிழ் நிகண்டு, தமிழ் இலக்கியம், நம் பண்பாடு போன்ற தலைப்புகளில் சில நேர்காணல்களும், பல கட்டுரைகளும் நிறைந்திருக்கிறது 'பரண்' புத்தகத்தில்.
அறிவியல் ஏன் ஒருவரின் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தையும், அவ்வாறு கற்பிக்காமல் போகும் போது எப்படிச் சமூக நீதி மறுக்கமறுக்கப்படுகிறது என்பது ஒரு கட்டுரையில் அலசப்பட்டிருக்கிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி நம் தமிழ்ச் சமூகத்தின் அறிவானது எழுத்துக்களாகப் பதிவானதைக் காட்டிலும் பாடல்களாகவும் , பழமொழிகளாகவும், வழக்குத் தொடர்களாகவும் பதிவாகியிருப்பதை எடுத்துரைக்கிறார் தொ. ப.
உமறுப் புலவர் முகமது நபிகளுக்காக ஆற்றிய சீறாப்புராணம் காப்பியத்தின் முதுமொழி மாலை என்னும் கடவுள் வாழ்த்தைத் தான் ஆய்வு செய்ததை ஒரு கட்டுரையில் அழகாகக் கூறி இருக்கிறார் தொ.ப. இசுலாம் மதத்தில் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை முதலில் அறிமுகம் செய்தவர் உமறுப் புலவரே ஆவர். உமறுப்புலவரருக்குப் பின்னரும் 14 பிள்ளைத்தமிழ் நூல்களை இஸ்லாம் தமிழ் இலக்கியத்திற்குக் கொடையாக அளித்திருக்கிறது.
சிறுகதை இலக்கியம் பிறந்த நோக்கத்தை ஒரு கட்டுரையில் விளக்குகிறார் தொ.ப. சிறுகதை என்பது தொழில் வளர்ச்சி காரணத்தினால் மனித மனங்களுக்கு ஏற்படும் நம்பிக்கை ஏமாற்றம் அதிர்ச்சி போன்ற வெவ்வேறு உணர்வுகளின் வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இலக்கிய வகை என்றும் அது ஒரு நவீன மனிதனின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது என்று கூறி மணிக்கொடி சிறுகதை எழுத்தாளர்கள் தொடங்கி சுந்தரசாமி, புதுமைப்பித்தன் அவர்களின் சில சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் இருக்கும் குறை நிறைகளை இந்தக் கட்டுரையில் விவாதித்திருக்கிறார் தொ.ப. அதனை வாசிக்கும்பொழுது எப்படி ஒரு சிறுகதையைப் பல கோணங்களிலிருந்து அணுக வேண்டும், அதற்கான தேவை என்பதெல்லாம் புலப்பட்டது.