மணப்பெண் அலங்காரத்தில், சிவப்பு நிற பட்டுப் புடவை உடுத்தி, குனிந்த தலை நிமிராமல் மெல்ல எட்டு வைத்து அவனருகில் அமர்ந்தாள். மறந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால், அவன் கண்கள் அவளையே சுற்ற, மந்திரங்கள் ஓதி, மாங்கல்யத்தை கையில் எடுக்கும் வரையிலும் அவள் நிமிரவில்லை. தாலியை ஐயரிடம் இருந்து பெற்றுக்கொண்டவன், சரியாக அவள் கழுத்தில் ஏற்றும் வேளையில், அவளது காதோரம் குனிந்து, "திருடுன என் பென் ட்ரைவ எப்ப தருவ?" எனக் கேட்டு கிசுகிசுத்தான். அதில் பட்டென நிமிர்ந்த சாரு இருக்கும் இடம் மறந்து கண்ணை சுருக்கி அவனை முறைத்து வைக்க, அம்முறைப்பில் தன்னை மீறி மெலிதாய் புன்னகைத்தவன், மாங்கல்யத்தை அணிவித்தான்.
____ கேலியும் கிண்டலுமாக, புது மண தம்பதியரின் பார்வை