மக்கள் நடுவில் முனைவர் பொற்கோ: makkal naduvil munaivar portko (பேராசிரியர் பொற்கோவின் படைப்புகள் | Collection of works by Dr Pon Kothandaraman (Portko))
"ஓய்வாக இருந்து அமைதியாகப் படிக்கத் தகுந்த நூல்கள் வேண்டும் . அப்படிப்பட்ட நூல்கள் எப்போதும் நாவல்களும் சிறுகதைகளுந்தான் என்று பொதுவாகப் பலரும் நினைக்கிறார்கள் . மக்களுக்கு உரிய வாசிப்பு நூல்களின் எல்லை விரிவு பெறவேண்டும் . அந்த ஆசையில் வெளிவருவதுதான் இந்நூல் . இந்த நூலில் உள்ள பெரும்பான்மைப் பகுதி மக்கள் நடுவில் நான் நிகழ்த்திய குறிப்பிடத்தக்க சிறப்புக்கு உரிய உரைகள் . ஏனையவை நேர்முகம் அல்லது பேட்டி போன்றவை. என்னுடைய பேச்சுகளை உரையாக எழுதி என்னிடம் ஒப்புதல் பெற்று அன்பர்கள் சிலர் இதழ்களிலும் மலர்களிலும் வெளியிட்ட சில உரைகளும் இங்கே இடம்பெற்றுள்ளன. ஏனைய உரைகள் யாவும் மேடைகளில் நான் பேசிய பேச்சுகளின் எழுத்து வடிவங்கள் .