காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து, காவல்துறை உயர் அதிகாரி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கேட்டுக்கொண்ட போது காந்தி அதை மறுத்து விட்டார்.
மகா ஆத்மாவின் மனதில் என்ன இருந்திருக்கும் என்பதை நான் இவ்வாறு புரிந்துகொண்டேன்.
"பாதுகாப்பை பலப்படுத்தினால் தன்னோடு சேர்ந்து நிறைய உயிர்களும் பறிபோகலாம் என்ற எண்ணத்தில்தானோ?"
காந்தியின் அஸ்தி ஏற்க்கனவே இந்தியாவின் அனைத்து நதிகளிலும் கலக்கப்பட்டுவிட்டதால். தனது அஸ்தியை பாவப்படாத சிந்து நதியில் கலக்குமாறு கேட்டுக்கொண்டார் கோட்ஸே. (காந்தியின் அஸ்தி, பாகிஸ்தானில் இருந்து பாயும் சிந்து நதியில் கலக்க அனுமதி கிடைக்கவில்லை)