திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம். - ஜெயமோகன்
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
‘என்ன பாஷை பாஸ் இது ? ஒருமாதிரி பிசுபிசுப்பா இருக்கு ? ‘
‘இது விஷ்ணுபுரம் பாஷைடா . இந்த ஆள் கொஞ்சம் குழம்பிட்டான்னு தோணுது… முப்பது காப்பி விக்கிற பத்திரிகைகள்ல எழுதறவனையெல்லாம் சேத்துக்கிட்டா இப்டித்தான்….. ‘
இந்த வரிகளை வாசித்தவுடன் சுஜாதா தான் ஜெயமோகனை பகடி செய்து எழுதி இருக்கிறாரோ? என்று தோன்றும்.
ஆனால், இந்த வரிகள் 'ஜெயமோகன்' எழுதிய 'நான்காவது கொலை' என்கிற குறுநாவலிருக்கிறது.
தமிழில் நான் படித்த இரண்டாவது spoof கதை. முதல் கதை சபரிராஜ் பேச்சிமுத்து எழுதிய 'விபத்து' என்கிற சிறுகதை.
ஒரு சராசரி வாசகன் தன்னுடைய குழந்தைப் பருவத்தில், 'இரும்புக்கை மாயாவி' போன்ற காமிக்ஸ்களை படிக்கிறான். பின்னர் பத்தாம் வகுப்பு விடுமுறையில் 'பொன்னியின் செல்வன்' வாசிக்கிறான். கல்லூரி நாட்களில் சுஜாதா என்கிற எழுத்து ராட்சசன் சூழ்ந்து கொள்கிறார். இருபது வயதிற்கு மேல் இலக்கியம் வாசிக்க தொடங்கி, அப்படியே, அந்தோன் செகாவ், கார்சியா மார்க்கஸ், தால்ஸ்த்தாய் என்று வேறு உலகத்தில் பயணிக்க தொடங்குகிறான்.
பிறகு, தன்னைப்போலவே திரியும் மென்டல்களிடம் சென்று, "ப்ரோ, கொலை செய்வதன் உளவியலைப் பத்தி தஸ்தேவெஸ்கி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?" என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
இதில், கணேஷ்-வசந்த், துப்பறியும் சாம்பு, ஆழ்வார்க்கடியன், ஷெர்லாக் ஹோம்ஸ் -வாட்சன், சங்கர் லால், ஜேம்ஸ்பாண்ட், இரும்பு கை மாயாவி, சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என பலரையும் வைத்து செய்துள்ளார். ஆனால், அதிகமாக ஜெயமோகன் கலாய்த்தது அவரையே தான்.
தன் எழுத்தில் உள்ள குறைகளை அறியாதவன் சிறந்த எழுத்தாளன் ஆக முடியாது. அதனை அறிந்து கொண்டு சுய விமர்சனம் செய்கிற பக்குவத்தினால் தான் அவர் ஆசானாக உள்ளார்.
ஒரு கதாப்பாத்திரத்தை காட்சியை spoof செய்வது என்பது சுலபம், உதாரணமாக, இரும்புக்கை மாயாவி சாலையோரம் நின்று கடலை தின்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு இரும்பு வியாபாரி அந்த இரும்புக்கையை பிடிங்கிவிட்டு ஒரு பொட்டலத்தில் பேரிச்சம் பழத்தை கொடுத்து விட்டு செல்கிறான்.
"நீங்கள் அவரை துரத்திப் பிடிக்கவில்லையா?" என்று ஷெர்லாக் ஹோம்ஸ் கேட்கிறார்.
"இல்லை, அவன் கொடுத்ததை நான் வெடிகுண்டு என்று நினைத்து வீசி விட்டு தரையில் படுத்துக்கொண்டேன். பின்னர், நான் எழுந்து குளித்து விட்டு வருவதற்குள், அந்த இரும்பு வியாபாரி காணாமல் போய்விட்டான்" என்கிறான் இரும்புக்கை மாயாவி.
"எதற்கு குளிக்கப் போனீர்கள்?" என்கிறார் வாட்சன்.
"இந்திய சாலையோரங்களில் என்னென்னெ இருக்கும் என்று உங்களுக்கு தெரியாது வாட்சன்" என்கிறான் இரும்புக்கை மாயாவி.
இந்த வரிகளை எழுதும் போது, எழுத்தாளன் எந்த மனநிலையில் இருந்திருப்பான் என்று கற்பனை செய்து பார்த்தேன். ஒரு இருட்டான தனி அறையில் ஒளிரும் கணினியின் முன்னே விசைப்பலகையில் கை வைத்தபடி சிரித்துக்கொண்டிருக்கும் ஒருவரின் சித்திரம் தோன்றியது.
இந்த குறுநாவலில் ஜெயமோகன் வெறும் கதாப்பாத்திரங்களை மட்டும் spoof செய்யவில்லை. முதல் ஐந்து அத்தியாயங்களில் தேவன், சுஜாதா, மற்றும் மொழிபெயர்ப்பு தமிழ் என எழுத்தையே spoof செய்துள்ளார். அதனை வாசித்து மட்டுமே உணர முடியும்.
ஒரே அமர்வில் இடைவிடாமல் வாசித்து முடித்த கதை. குபீர் சிரிப்பு பல இடங்களில் வெளிப்படும், எனவே பொது இடங்களில் வாசித்து அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டாம். வாசித்து முடித்த பின் இதை ஜெயமோகன் தான் எழுதினாரா? என்கிற சந்தேகம் வரும்.
ஒரு வாசகர் கடிதத்துடன் முடிக்க நினைக்கிறேன்,
கொலையுண்டவரை மல்லாத்திபோட்டு போதிய சம்ஸ்கிருதத்துடன் எல்லாரும் சுற்றி அமர்ந்து ஆன்மீகமாக ஆளுக்கொரு கதை பேசிக் கொண்டிருக்கலாம், அவர் புரண்டுபடுக்கும் போது எல்லாம் தெளிவாகிவிடும் என என் வீட்டுக்காரர் அபிப்பிராயப்படுகிறார் .
பிரபலமான துப்பறியும் கதாபாத்திரங்கள், ஜேம்ஸ் பொன்ட், சுப்பர்ஹீரோக்களையெல்லாம் கோமாளிகளாக்கி அங்கதப் பாணியில் நாவலை எழுதியிருக்கிறார் ஜெமோ.வித்தியாசமான முயற்சி.எழுதியது ஜெமோவா? அல்லது அவரைப் பிடிக்காத ஒருவரா என்று சந்தேகிக்குமளவுக்கு தன்னையும் விஷ்ணுபுரம் நாவலையும் கலாய்த்திருக்கிறார் ஜெமோ.எளிமையான மொழிநடை. சலிப்பூட்டாத கதை சொல்லும் பாணி.பொழுதுபோக்காக வாசிக்கலாம்.