Jump to ratings and reviews
Rate this book

ராஜ திலகம் [Raja Thilagam]

Rate this book
ம ணல் மேட்டுக்கருகே வந்ததும், எட்டவே சில விநாடிகள் நின்று தன்னை உற்று நோக்கிய பல்லவ இளவல் மீண்டும் ராஜநடை போட்டு மெல்ல மெல்லத் தன்னை நெருங்க முற்பட்டதைக் கண்ட மைவிழிச் செல்வி, விவரிக்க இயலாத வேதனைக்கும் சங்கடத்துக்கும் சினத்துக்கும் உட்பட்டாளாதலால், அவள் கண்கள் கனலைக் கக்கியதன்றி அவள் அழகிய உதடுகளும், “நில்லுங்கள் அப்படியே” என்று சுடு சொற்களை உதிர்த்தன.
கால்களுக்குத் திடீரென்று யாரோ விலங்குகளைப் பூட்டியது போல் அந்தச் சொற்கள் பல்லவ இளவலின் நடையைத் தேக்கி விடவே, சட்டென்று நின்றுவிட்ட அவன் தனது கண்களை மணற்குன்றின் மேல் நின்றிருந்த மங்கை மீது மீண்டும் ஓட விட்டான். தன் கால்களுக்கு விலங்கிடும் வல்லமை அவள் விசித்திர அழகுக்கு எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கவும் தொடங்கினான். பாவம், பல்லவ இளவல் எத்தனை அபாக்கியன்! கம்பன் பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பிறந்து விட்டானே! இல்லையேல் மகாகவி கம்பன் தாரைதேர்ந்தெடுத்த பெண்களை 'விலங்கு மெல்லியல்' என்று வர்ணித்திருப்பதைப் படித்திருப்பானல்லவா? படித்திருந்தால் அற்புத அழகுக்கு எந்த ஆண்டவனையும் விலங்கிட்டு அசைவற்று நின்றுவிடச் செய்யும் விசித்திர சக்தி உண்டென்பதைப் புரிந்து கொண்டிருப்பானல்லவா? கம்ப காவியத்திற்கு முன் அவன் பிறந்தாலென்ன, உணர்ச்சியைத் தூண்டும் அந்த ஓவியப் பாவையை மீண்டும் பார்த்துப் பிரமித்து அசைவற்று நின்றான் பல்லவ இளவல் அந்த நேரத்தில்.
நிலவுக் கதிர்கள் அவள் உடலெங்கும் தழுவி செல்ல, நிலவுக்கு அழகு செய்யும் நிலவென யார் மனத்தையும் மயக்கும் மோகன வடிவத்துடன் நின்றிருந்தாள் மைவிழி அந்த மணல் மேட்டின் மீது. வாரிவிட்டு எடுத்துக் கட்டப்பட்டிருந்த வார்குழலின் பின் ஜடை முன்புறம் நின்றிருந்த பல்லவ இளவலின் கண்களுக்குத் தெரியாவிட்டாலும், வகிடு எடுத்து அழகாகச் சீவப்பட்ட கரிய குழலின் முன்னுச்சியும் அதிலிருந்து அலைந்து நுதலின் மேல் பகுதியை அடிக்கடி தடவிக் கொடுத்த இரண்டொரு மயிரிழைகளும் அவன் விழிகளுக்கு நன்றாகவே தெரிந்ததால், அவை தன்னை வாவாவென்று அழைப்பதாகவேமனத்தில் கற்பனை செய்து கொண்டான் அவன். முன்னுச்சியைத் தடவிய மயிர்களை அடுத்துப் பிறைமதியென விரிந்த நுதலும், நுதலின் கீழே வளைந்து கிடந்த புருவ விற்களும், அவற்றின் கீழே சதா மை தீட்டப்பட்டவை போல் கறுத்து, திறந்து திறந்து மூடும் முத்துச் சிப்பிகளெனக் காட்சியளித்த இமைப் பகுதிகளும், அவள் கண்களையென்ன கருத்தையும் கவர்ந்தன. அந்த இமைகளெனும் சிமிழ்களுக்கிடையேபளிச்சிட்ட கருமணிகள் இரண்டு சினத்துடன் தன்னை நோக்கினாலும், அவற்றின் கருமையிலும் ஒரு நீரோட்டமும் ஒளியும் கலந்து, சினத்திலும் அவற்றுக்கு இணையிலா அழகையும் கவர்ச்சியையும் அளித்ததைக்கண்ட இளவல், 'வைரத்தில் கறுப்புஜாதி என்பது ஒன்று இருந்தால் இப்படித்தான் இருக்கும்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அந்த இரு கண்களுக்கும் இடையில் நுதலிலிருந்து இறங்கிய நாசி அதிக தீர்க்கமாக இல்லாமல் தேவையான அளவுக்கு இருந்ததையும், கன்னங்கள் மட்டும் மிகமிக வழ வழப்பாகவும் செழித்துக் கிடந்ததையும் கண்ட இளவரசன், அந்தக் கன்னங்களில் ஒன்றை, தலையிலிருந்து இறங்கி முத்தமிட்டுக் கொண்டிருந்த இரட்டை முத்துச்சரம் எத்தனை அதிர்ஷ்டம் வாய்ந்தது என்று எண்ணிப் பார்த்தான். அந்தக் கன்னங்களின் அழகுகளைத் தூக்கியடிக்கும் அவள் மதுர அதரங்களின்சிவப்பையும் அவையிரண்டும் குவிந்த போது தெரிந்த நீரோட்டத்தையும் கண்டு, 'பல்லவ வம்சத்தின் இணையிலாச் சொத்தும், என் தந்தையின் மார்பிலுள்ள ஆரத்தில் பதிந்து ஆடுவதும் ஆன உக்ரோதயம் என்ற ஜீவ மாணிக்கங் கூட இவள் அழகிய அதரங்களுக்கு ஈடாகாது' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அந்த மாணிக்க அதரங்கள் அவனுக்கு மதி மயக்கம் அளித்தனவென்றால், அவள் சங்குக்கழுத்தும், கழுத்தின் கீழே அவனை நோக்கிச் சினத்துடன் சீலை மறைவிலிருந்தே முறைத்த இரட்டை அழகுகளும் அவன் சிந்தையை அடியோடு நிலைகுலைய அடித்தன. அதுவரை அவன் பார்வையைப் பொறுத்துக் கொண்டிருந்த மைவிழி சட்டென்று மணல் மேட்டில் தன் கையை ஒரு புறம் ஊன்றிக் கால்களையும் சற்று நெருக்கிக் கொண்டு அரைவாசி சாய்த்த வண்ணம் உட்கார்ந்தாள்.

830 pages, Paperback

66 people are currently reading
1070 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
212 (46%)
4 stars
150 (32%)
3 stars
70 (15%)
2 stars
16 (3%)
1 star
9 (1%)
Displaying 1 - 19 of 19 reviews
Profile Image for Sridhar Babu.
208 reviews6 followers
March 7, 2017
புதினத்தின் பெயர்

"ராஜதிலகம்"

எழுதியவர்

"சாண்டில்யன்"

கதாபாத்திரங்கள்...

ராஜசிம்ம பல்லவன், பரமேசுவரவர்மன், ஆச்சார்ய தண்டி, ஸ்ரீராமபுண்யவல்லபர், விக்கிரமாதித்தன், பூவிக்கிரமன், ரங்கபதாகாதேவி, மைவிழிச்செல்வி, யாங்சின், பலபத்ரவர்மன், இந்திரவர்மன், ரணதீரன், வீரபாகு, விநயாதித்தன், விஜயாதித்தன்.

கதை இடம் பெறும் வரலாற்று பகுதிகள்:

மாமல்லபுரம், காஞ்சி, விளிந்தை,தழைக்காடு, உறையூர், பெருவளநல்லூர்.

இது ஒரு வரலாற்று புதினம்.

கதை :

இப்புதினத்தின் கதை ராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது நரசிம்மவர்மனின் தந்தையான பரமேசுவரவர்மன் காலத்தில் துவங்குகிறது.

பல்லவ சக்ரவர்த்தியான பரமேசுவரவர்மன் சாளுக்கிய வேந்தனாகிய விக்கிரமாதித்தன் படையெடுப்பின் காரணமாக, காஞ்சியில் இருக்கும் சிற்பங்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக சாளுக்கிய மன்னனுடன் நேரடியாக போர்புரியாமல் காஞ்சியை விட்டு அகலுகிறான். சாளுக்கிய விக்கிரமாதித்தன் காஞ்சியையும் பல்லவ தேசத்தையும் ஆக்கிரமித்தது மட்டுமின்றி சாளுக்கிய அரசை தெற்கே உறையூர் வரை விஸ்தரிக்க எண்ணுகிறான்.

பல்லவ இளவலும், பரமேசுவரவர்மன் மகனுமாகிய ராஜசிம்ம பல்லவன் சிறந்த சிற்பியும், ஓவியனுமாவான். அவனது கனவு காஞ்சியில் கைலாசநாதர் ஆலயத்தையும், மாமல்ல புரத்தில் அரங்கனுக்கு ஒரு கோவிலையும், கட்டி தனது சிற்பத்திறமையையும் இவ்விரு கோவில்களிலும் திறம்பட விளங்கச்செய்து வரலாற்றில் இடம் பிடிப்பதேயாகும். ஆனால் பல்லவ பேரரசு சாளுக்கியரால் ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டு வெகுண்டு பல்லவ பேரரசை சாளுக்கியரின் பிடியிலிருந்து விடுவித்து பின் கோவில் கட்டுவது என்று உறுதி பூணுகிறான் ராஜசிம்மன்.

தனது குருநாதரும், காஞ்சிக்கடிகையின் ஆசிரியருமான ஆச்சாரிய தண்டியின் உதவியுடனும், தனது நெடுநாள் காதலியும், பல்லவ ஒற்றர் தலைவன் இந்திரவர்மன் மகளுமான மைவிழிச்செல்வியின் உதவியுடனும் மாமல்லபுரத்தில் இருந்து, காஞ்சிக்கடிகைக்கு வந்து அங்கிருந்து தன் தந்தை ரகசியமாக படை திரட்டிக்கொண்டிருக்கும் இடத்துக்கு செல்ல திட்டமிடுகிறான் ராஜசிம்மன்.ஆச்சார்ய தண்டியின் மாளிகையில் கங்க மன்னன் பூவிக்கிரமன் மகளான ரங்கபதாகாதேவியை சந்தித்து காதல்வயப்படுகிறான்.

இந்நிலையில் சாளுக்கிய மன்னனது போர் அமைதி மந்திரியான ஸ்ரீராமபுண்ணியவல்லபரின் தந்திரத்தால் ராஜசிம்மனால்,சரியான சமயத்தில் தன் தந்தை பரமேசுவரவர்மனிடம் சென்று சேரமுடியாமல் போகிறது. பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் சரியான திட்டமிடல், வழிநடத்துதல் இல்லாமையால் "விளிந்தை" என்ற இடத்தில் சாளுக்கிய மன்னனின் நண்பனும், கங்க மன்னனுமாகிய பூவிக்கிரமனிடம் முறியடிக்கப்பட்டு படுகாயமடைகிறான். அதுமட்டுமின்றி தன் குலச்சொத்தான உக்ரோதயம் என்ற மாணிக்கத்தையும் கங்க மன்னனிடம் பறி கொடுக்கிறான்.

சாளுக்கிய மந்திரி ஸ்ரீராமபுண்ணியரின் தடைகளை கடந்தும், சாளுக்கிய மன்னனும், மாபெரும் வீரனுமாகிய விக்கிரமாதித்தன் கருணையாலும், ராஜசிம்மன் , படுகாயமடைந்த தன் தந்தையைசேர்ந்து, சீன தேசத்தவனும், தன் நண்பனுமாகிய யாங்சிங் உதவியுடன் தன் தந்தையை காப்பாற்றுகிறான்.

பின் விளிந்தையிலிருந்து கங்க தேசம் சென்று கங்க மன்னன் பூவிக்கிரமனிடம் அவனது மகளான ரங்கபதாகாதேவியை மணந்து பட்டத்துராணியாக்க வாக்கு கொடுத்து, கங்க மன்னனை சாளுக்கியர்களுக்கு உதவாமல் நடுநிலை வகிக்க வேண்டி சம்மதமும் பெற்று, தன் தந்தை, தன் நண்பன் சீனன் ஆகியோர் உதவியுடன் படை திரட்டி ,சாளுக்கிய நாட்டின் மீது யாரும்எதிர்பாரா தருணத்தில போர் தொடுத்து, விக்கிரமாதித்தன் மகன் விநயாதித்தனையும், பேரன் விஜயாதித்தனையும் துங்கபத்திரை அருகே முறியடிக்கிறான் ராஜசிம்ம பல்லவன்.

இந்நிலையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் சாளுக்கிய சாம்ராஜ்யத்தை உறையூர் வரை விஸ்தரிக்க எண்ணி, தன் போர் அமைதி மந்திரியான ஸ்ரீராமபுண்யவல்லபர் தடுத்தும் கேளாமல் பெரும் படையுடன் உறையூர் நோக்கி செல்கிறான். சாளுக்கிய மன்னது நோக்கத்தை அறிந்த ராஜசிம்ம பல்லவன் பாண்டிய இளவரசன் ரணதீரன் கோச்சடையானுடன் சாளுக்கியர்களுக்கு பல்லவர்களுக்கு எதிரான போரில் எவ்வித உதவியும் செய்யயக்கூடாது என்று கோரிக்கை வைத்து ரணதீரனின் சம்மதத்தையும் பெறுகிறான்.

பின்னர் அங்கிருந்து விளிந்தை நகரை அடைந்து
பரமேசுவரவர்மனும், இளவல் ராஜசிம்மனும் பெரும்படையுடன் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக படை நடத்தி உறையூருக்கு அருகே பெருவளநல்லூர் என்ற இடத்தில் சாளுக்கிய விக்கிரமாதித்தனை சந்தித்து நேருக்கு நேர் போர் புரிந்து விக்கிரமாதித்தனை முறியடித்து, அவன் பெரு வீரன் என்பதாலும், அவனால் காஞ்சி கோவில்களுகோ, மாமல்லபுரம் சிற்பங்களுக்கோ எவ்வித ஆபத்தும் நேராததாலும், ராஜசிம்மனை சிறை செய்ய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் விக்கிரமாதித்தன் போரில் சந்தித்துதான் வெற்றியடயவேண்டும் என்ற பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதாலும், ராஜசிம்ம பல்லவன் அவனை மன்னித்து சாளுக்கிய நாட்டுக்கு அஅனுப்புகிறான்.

பல்லவநாடு சாளுக்கியர் பிடியில் இருந்து விடுதலை அடைகிறது. ராஜசிம்ம பல்லவன், தன் இரு மனைவியர் மைவிழிச்செல்வி மற்றும் பட்டமகிஷி ரங்கபதாகா தேவி ராஜதிலகமிட, தன் தந்தை பரமேசுவரவர்மன், தன் குருநாதர் ஆச்சார்ய தண்டி ஆகியோர் ஆசிகளுடனும் வாழ்த்துக ளுடனும். காஞ்சியில் கைலாசநாதர் கோவிலை கட்டி முடிக்கிறான்.

என் பார்வையில்...

இந்த புதினம் திடமான சரித்திர ஆதாரம் மற்றும் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டுஎழுத்தப்பட்டுள்ளது. சரித்திர ஆதாரங்கள், அடிக்குறிப்புகள் ஆங்காங்கு தரப்பட்டுள்ளது இப்புதினத்திற்கு தனிச்சிறப்பு தருகிறது. அந்த கால போர் முறைகள் மிக அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல்லவ இளவரசன்ராஜசிம்மன், சாளுக்கிய மன்னனை பெருவளநலூர் என்ற இடத்தில் சந்திக்கும் போது அமைக்கும் "விருச்சிக தாண்டவம்" என்ற "தேள்" போன்று படைகளை நிறுத்தி அமைக்கும் வியூகம் அபாரம்.

பல்லவர்காலத்தில் காஞ்சியில் அமைந்திருந்த கடிகை, (பல்கலைக்கழகம்) அதில் பயிற்றுவிக்கப்பட்ட வேதபாடங்கள், தமிழ்மறைகள், பாரதம் முழுவதிலும் இருநது அங்கு வந்து,தங்கி கற்ற மாணவர்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் போன்றவை, இப்புதினத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆச்சார்ய தண்டி பாத்திரம்மூலம் அழகாக விளக்கப்பட்டுள்ளன.

உண்மைக்கதாபாத்திரங்களுடன் (பரமேசுவரவர்மன், ராஜசிம்ம பல்லவன், விக்கிரமாதித்தன், ரங்கபாதகாதேவி, பூவிக்கிரமன்) கற்பனை கதாபாத்திரங்களும் சரியான தருணங்களில் சேர்க்கப்பட்ட விதம் புதினத்திற்கு மேலும் சுவை கூட்டுகிறது.

சாண்டில்யனுக்கே உரித்தான காதல், பெண்கள் குறித்த அவரது வர்ணணை, குறிப்பாக மைவிழி செல்வியுடனும், ரங்காபாதகா தேவியுடனும், ராஜசிம்மன் தனியே சந்திக்கும் தருணங்களில் அவர்களது மார்பகங்கள் மற்றும் பின்னெழிலை விவரிக்கும் முறை அளவுக்கு மீறி படிப்பவர்களை சற்றே நெளிய வைக்கிறது. ஆனாலும் காதல்காட்சிகள் கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் சுவையாயும், ரசனையோடும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப்புதினத்தில் இன்னொரு சறுக்கலான பாத்��ிரம், சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்யன் பாத்திரம். இந்தப்புதினத்தில் இவர் "அநியாயத்திற்கு நல்லவர்" என்ற ரகத்தில் சேர்க்கப்படவேண்டியவர். "பல்லவ இளவல் ராஜசிம்மனை, போரில் நேருக்கு நேர் சந்தித்து யுத்த தர்மப்படிதான் வெல்வேன் " என்று பெருந்தன்மையாக சொன்னாலும், அதற்காக அடிப்படையான ராஜதந்திரம் கூடவா இல்லாமலிருப்பான் ராஜ்ய விஸ்தரிப்பு கனவில் இருக்கும் ஒரு பேரரசன்? ராஜசிம்மனை தனது போர் மந்திரி சிறைப்பிடிக்க போடும் திட்டங்களை விக்கிரமாதித்தனே உடைத்து காப்பாற்றுகிறான். பாண்டியர்கள், சாளுக்கியருக்கு போரில் உதவக்கூடாது என்ற பல்லவ இளவலின் உடன்படிக்கையை தானே பாண்டிய இளவலை உறையூருக்கு வரவழைத்து நிறைவேற்றுகிறான். இப்படி பெருந்தன்மையின் சிகரமாக திகழ்ந்து கடைசியில் பல்லவ இளவலிடமே தோற்றுப்போகிறான் என்பது, நம்பும்படியாக இல்லை.

இந்த புதினத்தை படித்து முடித்ததும் 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு சரித்திரதையும், அதன் ஒப்பற்ற மன்னர்களையும் விட்டுப்பிரிகிற ஏக்கமும், வருத்தமும் படிக்கும் நேயர்களை வந்தடைவதை கண்டிப்பாக தவிர்க்கமுடியாது.


ராஜதிலகம்-- கம்பீரம்.
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
சாண்டில்யன் பெண்களை அதிகமாக வர்ணிப்பார் என்று நண்பன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இதுவரை படித்த நாவல்களில் இருந்த வர்ணிப்புக்கே வாயைப் பிளந்தவன். ராஜதிலகம் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முன்னால் வந்து நிற்கிறது. இது முழுக்க முழுக்க புராணக் காதல் காவியம். நம் கண்ணை மயக்கும் இரு மங்கையரின் அழகுக் கடலில் மிதக்க நேரிடும். இவற்றுக்கு இடையில் சிறிது ராஜதந்திரமும் போரும் கலந்து கூறப்பட்டுள்ளது.
Profile Image for Mani Kandan.
50 reviews3 followers
March 10, 2021
The first 200 pages are not so much interesting. I really doubted how come this is getting 4 stars. My initial rating is only 3 that too for his tamil fabulous tamil writing. Author might have reduced adult content little bit. It decreases the fastness of the story. I have to admit that though the first 200 pages are not good as I expected, I could finish quickly. After 200 the story got a steady flow. While crossing 600 pages, keeping in mind the twist and turns of the story, i raised the rating to 3.5 and the wonderful finale has increased its rating itself to 4.

Totally it is worth to read.
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
December 23, 2021
Sandilyan - one of the kings of tamil historical fiction - has written this amazing novel. The attention to details with historical facts is amazing. This novel is about the events that happened in the life of Narashima Pallavan II called Rajasimhan, the grandson of Mamallan Narashimavarma Pallavan I. He built the Kailasanathar temple at Kanchi. The events that unfold are amazing along with the characterization.
Profile Image for Varun Ragul.
23 reviews
May 17, 2021
Excellent plot. This story happens when Narasimha pallavan destroyed vatapi pulikesi. Pulikesi son vikramathiya 1 want to take revenge and want to expand his kingdom till uraiyur and very smartly captured kanchipuram and current ruler just left the kanchipuram, with help of his son Rajasimha pallavan how he gained back his kingdom by defeating Vikramatidhya 1.
Profile Image for Saravanan.
356 reviews20 followers
January 24, 2013
ஜெகசிற்பியனின் மகரயாழ் மங்கை இரண்டாம் நரசிம்மவர்மன்னை(ராஜசிம்மன்) ஒரு விதத்தில் அலசுகிறது. இந்நாவல் இன்னொரு விதத்தில் அலசுகிறது.
Profile Image for Deepak Krishnamurthy.
7 reviews
September 12, 2025
Book contains more details about the breasts and hips of the female characters and how the prince was always turned on by both his lovers, than it had details on Pallava Chalukya war, the life and times of 700 AD or even information about ancient Tamil Nadu.
After a while it just becomes boring and repetitive. The prince finds himself with either or both of his lovers and starts fondling their hips and looking at their breasts. Then he stops himself and the story progresses a little bit. And the cycle repeats.
Profile Image for Hari.
6 reviews1 follower
December 3, 2019
Explain how pallavas recapture kanchi from chalukyas... Once again sandilyan proves who he is... He beautifully narrated the story with his speculation...👏👌💪🙏. After read this story I wanted to see kanchi kailasanathar temple and arangan temple in mamallapuram.😍😍😍
Profile Image for Sami Nathan.
64 reviews6 followers
May 16, 2020
திரு சாண்டில்யன் அவர்கள் தனக்கே உரிய நடையில் பல்லவ ராஜசிம்மனை மையமாகவைத்து வரைந்த சரித்திர புதினம். இரண்டாவது முறை படிக்கின்றேன்; வீரம், காதல், தியாகம், பெருந்தன்மை போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து தரப்பட்டிருக்கும் மிக அருமையான படைப்பு.
7 reviews1 follower
January 3, 2022
சாண்டில்யனின் மற்ற வரலாற்று நூல்களை ஒப்பிட்டு பார்த்தால் கதை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் கதை கொண்டுபோகும் விதத்தில் படிப்பவர்களை தன் கதையோடு கொண்டு செல்வார். அதேபோல இந்த நூலும் படிப்பவர்களை தன் தமிழினாளும் தன் வர்ணனைனாளும் படிப்பவர்களை ஈர்த்துக் கொண்டார்
Profile Image for Nithya Nithu.
2 reviews
Read
January 24, 2019
good
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 19 of 19 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.