திருமங்கலம் ஃபார்முலா. தமிழ்நாட்டின் சமகாலத் தேர்தல் அரசியலில் தவிர்க்க முடியாத பேசுபொருள். ஆம், வாக்குறுதிகளைச் சொல்லி வாக்குகளைக் கவர்வது போய் வாக்குகளைக் கவர்வதற்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கத் தொடங்கிய கலாசாரத்துக்கு தற்போது சொல்லப்படும் அடையாளப் பெயர்தான் திருமங்கலம் ஃபார்முலா.உண்மையில், திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்னால் எந்தவொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்குப் பணம் தரப்படவில்லையா என்று கேள்வி எழலாம். உண்மையில், திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு வெகுகாலத்துக்கு முன்பே வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் மோசமான கலாசாரம் முளைவிட்டு விட்டது. அதன் வளர்ச்சி வெளியே தர ஆரம்பித்தது திருமங்கலம் இடைத்தேர்தலின்போதுதான்.
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.