எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு.
உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் தன்மை. இதெல்லாம் விடுதலைப் புலிகளின் திறனுக்குச் சான்று. தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கமாக அவர்கள் நடந்துகொள்வது ஆச்சரியமான விஷயம். தற்கொலைப்படை என்னும் ஆயுதத்தைக் கொண்டு இலங்கை, இந்திய அரசுகளின் முக்கியமான பல தலைவர்களை புலிகள் கொன்றுள்ளனர். பிற போராளி இயக்கங்கள் என்று எதுவுமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீர்த்துக்கட்டியுள்ளனர். பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள், குழந்தைப் போராளிகளைப் படையில் வைத்திருப்பது, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மிரட்டிப் பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது.
ஆனாலும் ஈழத் தமிழர்கள் பலரும் இன்று விடுதலைப் புலிகளை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலையில் உள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தை உருவாக்கி இன்றுவரை நடத்திவரும் பிரபாகரன் என்ற மனிதர், இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி/இனப் போரின் பின்னணி, இந்தியாவின் தலையீடு எனப் பலவற்றையும் தொகுத்து புரியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது.33 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் காவலரண்கள் என்ற ஒரு மனிதன் அவர்களது தனி ஈழக் கனவு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை. அவரது இழப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க சிலர் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள். உலகில் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையில் எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் இருந்திருக்கின்றார்கள்.ஆனால் விடுதலைப்புலிகள் மிகவும் வித்தியாசமானவர்கள் அவர்களிடம் கடற்படை, விமானப்படை கூட உண்டு.ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு கடற்படை, வான்படை இரண்டையும் வைத்திருக்கும் அளவுக்கு உருமாறியது எவ்வாறு ,5 பேர் கொண்ட இயக்கம் 25 ஆயிரம் வீரர்களாக மாறியது எவ்வாறு,மேலும் பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள்,குழந்தைப் போராளிகளை படையில் வைத்திருப்பது,இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த புலம்பெயர்ந்த தமிழர்களிடம் மிரட்டி பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது. இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி பிரச்சினை, இந்தியாவின் தலையீடு ஆகியவற்றை எளிமையாக புரியும் வகையில் தருகிறது இந்தப் புத்தகம்.
ஈழ அரசியல் மற்றும் விடுதலைப்புலிகளின் அமைப்பைத் தெரிந்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஏற்ற புத்தகம்.மருதன் அவர்களின் அபுனைவு எழுத்துக்கள் புதினம் போன்ற விறுவிறுப்பாக உள்ளது.
This book reads like a fast cut action movie, narrates the incidents that led to the inception of LTTE and how their vision of a Tamil Eelam Nation kept them fighting against the Sri Lankan government. Marudhan clearly says whose side he is on throughout the book (LTTE), but also criticizes them quite often to make us feel like he is not a Tamil nationalist. The book is filled with blasts after blasts, assassinations after assassinations, suicide bombings after suicide bombings. I almost wished for a hopeful ending for this book even though I knew well and good, what happened in the end.
Very detailed view and perspective of LTTE and their ideas. Through the book could feel the fire of LTTE. Author have explained in detail about how it all started, life of Prabakaran and the politics between Srilankan government, but there was only little information about Rajiv Gandhi though.
I felt the author was slightly inclined towards Viduthalai puligal in the book.
India lost its good friendship with both Srilanka and LTTE. People who cared more about Rahul Gandhi does not care about the tamils who are burned alive and raped in Srilanka.