அண்ணாவின் மரணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் மு.கருணாநிதி. அன்று தொடங்கி ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். என்றாலும், அவர் முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது குறித்து ஆச்சரியமூட்டும் செய்திகளும் அதிர்ச்சியூட்டும் விமர்சனங்களும் பரபரப்பான புகார்களும் இன்னமும் தொடர்கின்றன.கட்சியின் மூத்த தலைவர்களை எல்லாம் முந்திக்கொண்டு முதலமைச்சராகிவிட்டார் என்பது தொடங்கி எம்ஜிஆரின் ஆதரவைப் பெற்றே கருணாநிதி முதலமைச்சரானார் என்பது வரை பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.உண்மையில், அண்ணா மரணத்துக்குப் பிறகு திமுகவுக்கு உள்ளும் புறமும் என்ன நடந்தது? மூ
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.