இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான்.
நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார்.
எல்லாக் கோணங்களிலிருந்தும் நீ இப்போது வேலையிலிருக்கும் இடம் உன்னை இன்னும் இருபது வருடங்களில் ஒரு பெங்ய மனிதனாக உயர்த்திவிடுமா என்று நீயே நின்றாக யோசித்துப்பார்.
ஓரளவு சாத்தியம் என்றிருந்தாலும், இப்போதிருக்கும் இடத்திலேயே உன்னை உயர்த்திக் கொள்ள நீ என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கு.
ஒரு திட்டம் முன் யோசனையும் இல்லாமல் காலம் கழிக்காதே. ஆனால் உன் மனத்துக்கேற்ப இந்த வேலையில் போதிய வாய்ப்புகள் இல்லை என்றால் இப்போதே ஒரு முடிவு எடுத்துக்கொள். ஒரு மாதம், அதிகம் போனால் ஆறு மாதம். அதற்குமேல் காலத்தை வீணாக்காதே.
உடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார். இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். சொல்லாதே, என்னிடம் சொல்லாதே.
உன்னுடைய இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே.
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
“ஆகாயத் தாமரை” ஒரு மத்யமர் இளைஞனைப் பற்றிய கதை. இதில் திரு. அசோகமித்திரன் அவர்கள் சொல்கின்ற விஷயங்கள்(இக்கதை 1980யில் எழுதப்பட்டது) இன்றும் நடந்துகொண்டு இருக்கிறது. ஒரு மத்யமர் இளைஞன் வேலையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். எந்த ஒரு வேலையும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை என்றும். ஆடம்பரமான ஹோட்டல்களில் நடக்கும் கேலிகூட்டம் அது பாமரமக்களை பார்க்கும் விதமும், நகரங்களில் கட்டிகொண்டு அல்லது நோண்டிக்கொண்டு இருக்கும் மேம்பாலங்கள் ஆகட்டும். இவை அனைத்தும் இன்றைய காலகட்டத்திலும் நடந்துகொண்டு இருப்பதே இக்கதையின் சிறப்பு.
எனக்கு இது அசோகமித்திரன் அவர்களின் முதல் புத்தகம். ஆகயாத் தாமரை எப்படி மலரப் போகிறது என்ற ஒரு வித எதிர்பார்ப்புடனே ஆரம்பித்தேன். மிக தெளிவான நீரோட்டம் போல கதையின் நடை இருந்தது. மிக சில கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து ஒரு முழு நீளக்கதையை சிறிது கூட தொய்வின்றி நகர்த்தி செல்கிறார் அசோகமித்திரன் அவர்கள்.
ரகுநாதன், ராஜப்பா, மாலதி, முன்சாமி என்று நகர்கிறது கதை. 1980ல் வந்த முதல் பாதிப்பு இன்றும் கூட நடக்கும் நிகழ்வுகளை சரியாக எடுத்து சொல்கிறது. சீருடைக்காரர்கள் என்று புத்தகம் முழுக்க சொல்லப்பட்டிருப்பவர்கள் எப்படி மனிதர்களை தரசுகளில் எப்போதும் நிறுத்திப் பார்க்கிறார்கள், உடைகள் எப்படி ஒரு மனிதனை ஓரிடத்தில் அவனை அங்கமாக்குகிறது அல்லது தூக்கி தூர விட்டெறிகிறது என்று பல கோணங்களில் நகர்கிறது கதை.
25 அகவை மதிக்கத்தக்க இளைஞன் ரகுநாதன். நான்கு நாட்கள் விடுப்பும் அதற்கு பிறகான மாற்றங்களும் தான் இந்த ஆகாயத்தாமரை. ஆகாயத்தாமரை என்று ஓர் மலர் இருக்கும் போதிலும், ஆகாயத்தில் தாமரை மலர்ந்து இருக்குமா என்பது போன்ற கற்பனை தான் இந்த நாவலின் சாராம்சம் என்று எனக்குத் தோன்றியது. " என் வரைக்கும் சுதந்திரம் ஒரு ஆகாயத் தாமரை மாதிரி. அதை சொல்றப்போ ஏதோ நிஜமானது மாதிரி இருக்கு. ஆனா அதுக்கு ஆதாரம் கிடையாது. அது சாத்தியமானது கிடையாது" என்று ராஜப்பா ஓரிடத்தில் ரகுநாதனிடம் சொல்லுவார்.
ரகுநாதனின் கோபங்கள் இன்றளவும் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஓர் இளைஞனுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதை அப்படியே வைத்துக் கொள்ள இந்த சமூகமும் ஒரு வகையில் ஊன்றுகோலாகவே பரிணமிக்கிறது. ஆனால் சீருடைக்காரர்கள் (Security) அவர்களுது வேலையைப் பார்க்கிறார்கள் என்று யோசித்தால், வேறொரு பரிமாண மாற்றம் கிடைக்கிறது. உடைகளை வைத்து நான் யார் என்று முடிவு செயகின்ற சமூகம் தானே இன்றைக்கும் இருக்கிறது. இருப்பினும், அதை தாண்டி உடைகளை பொருத்தி பார்த்து இந்த உடைக்கும் இவனுக்கும் சமபந்தம் இல்லை என்று முடிவுக்கு வரும் சீருடைக்காரர்கள் தான் ரகுநாதனை மேலும் கோபத்திற்கு ஆளாக்குகிறார்கள்.
எளிமையான மனித மனதின் போராட்டத்தை, அலுவலகத்தில், வீட்டில், சாலையில், நண்பர்களிடத்தில் என்று மெல்ல எட்டி பார்த்து காட்டி செல்கிறது ஆகாயத் தாமரை. படித்துப் பாருங்கள்....
இதை படிக்கும் போது தோன்றியது இது எனக்காகவே எழுதியது போல் ஒரு மாயை. ஏனெனில் என் வாழ்வும் இக்கதையின் ரகுநாதன் வாழ்வும் ஒரே கோட்டில் பயணித்து கொண்டு இருந்தது... என்றும் என் ஆசான் அசோகமித்திரன் 😍
In this novel, we follow the life of Raghunathan for three days and get to witness to the events that unfold during this period. Raghunathan gets invited to a party, where instead of drinks, he orders coffee. In the party he meets a drunk Rajappa, who philosophizes with him a lot, including a reference to "Aagaya Thamarai" - an object that appears to be true, but is not. Raghunathan gets terminated from his job, and the next day when he meets Rajappa at his office, he does not recognize Raghunathan. In this journey, he also meets the rickshaw driver Munusamy, his friend Malathi, and also a neighbor who supposedly cares about him. Nothing dramatic happens - a rumination on mid-life crisis told in an episodic faction
A quick satire based drama from AM. The plot happens over a period of few days in the life of the protoganist. The journey is filled with wit & humour that one typically associates with AM. Also the love for the city of Chennai is also reflected in the narration as AM frequently mentions various landmarks as the protoganist travels through the city. Though nothing sensational happens till the end, still it is worth reading just for the narration style of AM and there is something about his writing which keeps the reader engaged till the last page.
இக்கதை நடுத்தர குடும்பத்திலிருந்து வருகிற ரகுநாதனின் வாழ்க்கையில் முக்கியமான மூன்று நாட்களை பற்றிப் பேசுகிறது. அவன் சந்திக்கின்ற மனிதர்கள், அவர்கள்மீது அவன் படும் கோபம், பொறாமை, அனுதாபம் மற்றும் அவர்கள் இவனை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அசோகமித்திரன் அழகாக எழுதியிருக்கிறார். காட்சிகள் மிக இலகுவாக விரியும் அழகு எழுத்து நடை. இவருடைய புத்தகங்களில் நான் வாசிக்கின்ற முதல் புத்தகம் இது.
கண்டிப்பாக தொடராக வந்ததாக இருக்கவேண்டும். மிக அருமையா சென்னையின் சித்திரங்கள். ஜெமினி, தி. நகர், மாம்பலம், திருவான்மியுர் இப்படி பல இடங்களை மிக அழகாக பதிவு செய்துள்ளார். இப்போது யாரும் சென்னையை பதிவு செய்கிறார்களா என்று தெரியவில்லை.
..... It may be that the end reveals some truth about life, but it is the characters life and their actions that ticks RaghuNathan, or was it us? ......
Simple incidents of 70's work atmosphere and Mount Road, Madras. It brought to my memories of Anna fly over construction, Mambalam, Adayar .. interesting.