இளமாறன் , உதயகுமரன், மாவலி, மன்னன் அச்சுதவிக்கண்டன், புத்தத்தர், காஞ்சிவர்மன் மற்றும் நீல ரதி இவர்களை மையமாக கொண்டு களப்பிரர்கள் காலத்தில் நடந்த சில உண்மை தொகுப்புகளை இடையே புகுத்தி புனைய பட்ட கதை தான் "நீல ரதி". மிகவும் அழகான நீல ரதியின் காவல் பெண் தெய்வமாய் எகிப்தின் ஐசிஸ் தேவதை.
இளமாறன் மனைவியை இழந்து சொத்துக்களையும் இழந்து அவன் எதிரியான காஞ்சிவர்மனை பழிவாங்கி, ரதியை மன்னனிடமிருந்து காப்பற்றி, உதயகுமாரனை வாழவைத்து விட்டு நாடு தாண்டி செல்வது தான் கதை.