மகாத்மா காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு முன்வைத்த 14 கொள்கைகளை எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நூல் இது, காந்தி எழுதிய 'From Yervada Mandir' என்ற நூலைத் தழுவியது. முன்பு எப்போதையும்விட, இன்றைக்குதான் காந்தி அதிகம் தேவைப்படுகிறார். அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டியதில்லை, அவர் என்ன சொல்லவருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அந்தத் திசையில் சிந்திக்கத் தொடங்கினால் போதும், நம்முடைய வழி முன்பைவிட நேராக இருக்கும். அதற்கு இந்த நூல் உங்களுக்கு உதவும்.