Jump to ratings and reviews
Rate this book

உதய பானு [Udaya Banu]

Rate this book
போர்க்களத்தில் பிணங்கள் அளித்த கோரக்காட்சி முன்பு, ரத்தக்கறை படிந்த ரணகளத் தரையின் முன்பு, அன்று உட்கார்ந்திருந்த நிலையிலும் அன்றொரு நாள் கண்ட அந்தப் பழைய காட்சி அவன் கண் முன்பு எழுந்ததால், அவன் முகத்தில் துக்கக்குறி மறைந்து சிறிய இன்பக்குறியும் துலங்கத் தொடங்கியது. பக்கத்தில் பள்ளமிருக்கிறதென்று புதரை விலக்கப் போக, அந்த அற்புதக் காட்சி தனக்குக் கிடைத்ததை மீண்டும் எண்ணிப் பார்த்த அவன் மனதில் பெரும் மகிழ்ச்சி பொங்கி எழுந்தது. அன்று புதரைத் தெரியாமல்தான் விலக்கினேன். ஆனால், அங்கு அவளிருப்பாள், அப்படியிருப்பாள் என்பது எனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டுக் கொண்டான் தன்னைத்தானே. அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டதன் முன்பாக அந்தப் பழைய கத

Unknown Binding

First published August 24, 2013

9 people are currently reading
101 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (19%)
4 stars
6 (14%)
3 stars
18 (42%)
2 stars
8 (19%)
1 star
2 (4%)
Displaying 1 - 4 of 4 reviews
2,121 reviews1,108 followers
October 25, 2018
பொதுவான எதிரியை பழிவாங்க வாய்ப்புக் கிடைத்தாலும் புத்தியில்லாதவர் சொந்த விருப்பு வெறுப்புகளால் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் காரியங்களில் ஈடுபடுவர்.

ராஜபுதனத்தை மொகலாயர்களிடம் இருந்து காக்கும் போரில் ஈடுபடும் சேனாதிபதி உதயபானுக்கும் கிளை வம்சமான மற்றொன்றின் தலைவர் மகனான சுபலசிம்மனுடன் மோதல் ஏற்படுகிறது.

போரில் உதயபானுவிடம் தோற்ற மொகலாயன் நூர் அலி பேரழகியான அஸானி வம்ச சகோதரிகளைக் கவர்ந்து செல்கிறான்.தான் மணக்க வேண்டிய பெண்ணும் அதில் இருப்பதால் தேடி சென்று நூர் அலியை கொன்ற சுபலசிம்மன் தந்திரமாகத் தப்பிக்கும் போது அங்கே இருக்கும் வீரர்களால் கொல்லப்படுகிறான்.

காதலியும் அஸானி சகோதரிகளில் ஒருவளான அருணாவுடன் தப்பித்துப் போகிறான் உதயபானு.
15 reviews
February 23, 2024
சாண்டில்யன் ஆரம்ப காலங்களில் எழுதிய கதைகளில் இரண்டு குறுநாவல் களை எழுதினார் அதில் ஒன்று தான் உதய பானு மற்றொன்று இளைய ராணி உண்மையில் இளைய ராணி கதையும் உதய பானு கதையும் எந்த அளவில் உண்மை என்று தெரியவில்லை ஆனால் இரண்டும் சுவாரஸ்யம் நிறைந்தவை டைம் பாஸ்க்காக படிக்கலாம்
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
August 7, 2016
சுவாரசியமான நாவல் தான் ஆனால் லொஜிக் தான் பல இடங்களில் இடிக்கின்றது.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.