Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram
'அச்சடித்த புத்தக வரிகளின் மேல் சின்னஞ்சிறு பிள்ளையார் எறும்பு ஊர்வது போல, எந்தத் தடங்கலும் இன்றி அது ஊர்ந்துகொண்டு இருக்கிறது.அடுத்த பக்கங்களின் வாசிப்பு அல்ல, ஊர்ந்துகொண்டே இருக்கும் அந்த உயிரின் அழகு முக்கியம் என்று நமக்குப் பிடிபட்டால் போதும்.' - வண்ணதாசன்
இந்தப் புத்தகத்திலும், ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கும் அழகியல் முக்கியம் என நாம் உணர்ந்துகொண்டால் போதும். ஊர்ந்துகொண்டு செல்லும் வாழ்க்கையில், நிகழ்வுகளுக்கு இடையில் ஒளிந்திருக்கும் அழகியலை தன் எழுத்து மூலம் தீட்டியிருக்கிறார். தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களின் முகங்களைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். வண்ணதாசன் அவர்களுடைய மொழியில், கோணத்தில் ஒவ்வொரு காட்சிகளும் அவ்வளவு அழகு. மிகவும் வசீகரமான தமிழ்நடை.