Jump to ratings and reviews
Rate this book

இவர்கள் இருந்தார்கள்

Rate this book
“பவா எழுதிய கட்டுரைகள் மீடியாவாய்ஸ் இதழில் வெளிவந்தன. அதன்பின் நண்பர் உதயஷங்கர் அதேபோல நினைவுகளை எழுதியிருந்தார். மீடியாவாய்ஸ் ஆசிரியர் ராவ் என்னிடம் அதில் எழுதும்படிக் கோரியபோது அந்த மரபை நானும் கொண்டுசெல்லலாம் என நினைத்தேன். என் நினைவில் நீங்காதிருந்த சில ஆளுமைகளைப்பற்றி எழுத ஆரம்பித்தேன் இக்கட்டுரைகளில் பல முன்பே எழுதப்பட்டவை. சிலவற்றை மாற்றி எழுதினேன். சில கட்டுரைகள் புதியவை. இப்படி ஒரு கட்டாயம் இல்லை என்றால் இவை இவ் வடிவில் வந்திருக்காது அதற்காக திரு ராவ் அவர்களுக்கு நன்றி.”

207 pages, Paperback

First published December 1, 2012

3 people are currently reading
69 people want to read

About the author

Jeyamohan

211 books851 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (30%)
4 stars
13 (56%)
3 stars
3 (13%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Karthick.
371 reviews123 followers
March 31, 2025
[6 Feb 2025 - 15 Mar 2025]

"கடவுளை இல்லாமல் வாழமுடியும் ஆனால் மனிதர்கள் இல்லாமல் வாழ முடியாது" என்று உலகநாயகன் கமல் ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னதாக ஞாபகம் எனக்கு.

இந்த புத்தகம் படித்துமுடித்தவுடன் எனக்கு தோன்றியதும் அதுவே. நாம் சந்திக்கும், பழகும் மனிதர்களே நம் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கிறவர்கள்.

ஜெயமோகன் தனக்கு அறிமுகமான மற்றும் நெருக்கமான ஆளுமைகள் பற்றி எழுதிய கட்டுரை தொகுப்பே "இவர்கள் இருந்தார்கள்". ஒரு வகையில் இவர்கள் - இலட்சியங்கள், கலை இலக்கிய சேவைகள் மூலமாக தங்களின் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள்.

* நித்ய சைதன்ய யதி - அத்வைத வேதாந்ததை ஆத்மாவாக கருதியவர்

* சு.சமுத்திரம் - சமூக பிரச்சனைகளின் கொந்தளிப்புகளை தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியவர். 'வேரில் பழுத்த பலா' அவரின் தலைசிறந்த படைப்பு.

* கடமன்னிட்ட ராமகிருஷ்ணன் - கவிதை மூலம் புரட்சி விதைத்த கேரளா கம்யூனிஸ்ட் சிங்கம். இவரின் 'க்ரதவிருத்தம்' கவிதை படிக்கவும். உணர்ச்சி பொங்கும் வார்த்தைகள்.

* P.K. பாலகிருஷ்ணன் - கிரேக்கர்கள் (யவனர்கள்) மற்றும் அவர்களின் அக்கால வணிகம் தமிழ்நாட்டில் எப்படி இருந்தது என்பதை பற்றி தீவிர ஆராய்ச்சி செய்தவர். "ஜாதி அமைப்பும் கேரளா வரலாறும்" முக்கிய படைப்பு.

* ஜோதி பிரகாசம் - இவர் தீவிர மார்க்சிஸ்ட். ஆய்வாளரும் கூட. பழந்தமிழ் இலக்கியங்களில் ஆளுமை கொண்டவர்.

மற்ற கட்டுரைகளில் - சுஜாதா, ஹேமச்சந்திரன், பேராசிரியர் ஜேசுதாசன், அய்யப்ப பணிக்கர், க.நா.சுப்பிரமணியன், கந்தர்வன், கொச்சி ஹனீபா, லா.ச.ராமாமிர்தம், கவிஞர் ராஜமார்த்தாண்டன், சி.சு.செல்லப்பா, கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன் என்று பல முக்கிய ஆளுமைகளுடன் தனக்கு கிடைத்தை அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

நாம் சம்பாதிக்க வேண்டியது பணம் மட்டும் அல்ல. மனிதர்களும், அவர்களுடனான அனுபவங்களும். அவர்களின் அன்பும், அறிவும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.
Profile Image for Thirumalai.
89 reviews12 followers
July 29, 2019
ஜெ பழகிய ஆளுமைகளை பற்றிய தொகுப்பு. இதனுடன் அவரின் அறம், புறப்பாடு சேர்த்து படித்தால் நன்றாக இருக்கும்
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.