புத்தகம்: சேதுநாட்டு வேங்கை எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் பதிப்பகம்: திருமகள் நிலையம் பக்கங்கள்: 400
💥 இதுவரை வாசித்த புத்தகங்களில் இது வேறுபட்ட ஒன்று. மதுரையை ஆண்டு வரும் சொக்கநாத நாயக்கரின் ஆட்சிக்கு பெரிய ஆபத்து வந்தது. மதுரையில் இருக்கும் மந்திரிகள் மூலம் சேதுநாட்டுக்கு செய்தி போனது.
💥 பகையை விட்டு சேதுநாட்டு மன்னர் , மதுரையை காப்பாற்ற முடிவு செய்கிறார். தனது பெரும் படையுடன் வந்து குதிரைக்காரனை வீழ்த்தினார் . நாயக்கர் அவர்களுக்கும் சேதுபதிக்கும் ஒரு நட்பு உருவானது.
💥 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - பன்னிரண்டாவது புத்தகம் இது.
💥 இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
கிழவன் சேதுபதி ஆட்சி காலத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள் தான் சேது நாடு வேங்கை. சீதக்காதி (சையது காதர்), சொக்கநாத நாயக்கர், மங்கம்மா, முத்துலிங்க நாயக்கர், இளந்தாரி அம்பலம், சோளகை சேர்வைக்காரன், குமராப்பிள்ளை, தளவாய் கோவிந்தப்பய்யா, வேங்கட கிருஷ்ணப்பர், ருஸ்தமகான் சாஹிப், தாதியதேவர், கையூம் மற்றும் சில முக்கியமான கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட நாவல்.
நாயர்க்கர் ஆட்சிக்காலங்களில் பாளையங்களாக பிரிக்கப்பட்ட போதிலும், தன்னாட்சி நடத்திவரும் கிழவன் சேதுபதி, அத்தனை காழ்புணர்ச்சிகளுக்கு மத்தியிலும், சொக்கநாத நாயக்கருக்கு தக்க சமயத்தில் உதவி புரிந்து, மதுரையில் நடக்கும் ஆட்சியை முறைப்படித்தி, மைசூர் படையெடுப்பையும் தடுத்து பெரும் உதவி செய்கிறார்.
சொக்கநாத நாயக்கருக்கும், கிழவனுக்கும் இடையே இருந்த மானசீக நட்பானது, முதலில் குதிரைக்காரன் ருஸ்தம்கானின் சூழ்ச்சியால் மதுரையை ஆளும் நிலைமையில் பிளவுபடவும், மீண்டும் கிழவன் ருஸ்தம்கானிடமிருந்து மதுரையை மீட்டு நாயக்கருக்கு கொடுக்கும் போது துளிர்விடும். ஆனால் மீண்டும் மங்கம்மாவின் கௌரவ பிரச்சனையால் மகன் முத்துலிங்கம், மற்றும் கிழவனின் தமையன் தாதியதேவரோட இணைந்து நிகழும் சூழ்ச்சியால் மீண்டும் பிளவுபடும். இறுதியில் சொக்கநாத நாயக்கரின் மரணத்தில் அவர்களின் நட்பு முழுமையடையும்.
வரலாறு தழுவி வரும் இந்த நாவல், கதையில் மட்டும் கருத்தாக நகரும். கொஞ்சம் காதல், வீரம், நட்பு, ஒழுக்கம், ஈகை இப்படி பலவிதமான உணர்வகளை உள்ளடக்கியது.
The strategies matters here...!!! The Sethupathi moves his coin which returns a very much favour on the field of politics. His helping hand towards Chokkanatha Nayakar, really seems nice means the way he stood together to oppose the Mughals. I personally liked his three women, and one of his women Alagammai came to The Sethupathi darbar to tell something with hand full of bangles but won't showcase it to kizhavan which made me to wait till the end of the book to hear about the news, and there is no continuation of the story about that incident after(That made me little disappointed). On the whole, this book is a very nice epic to tell the Kizhavan's political moves and his respects towards his people and in viceversa.