The story of an orphan who didn't know his village or parents or caste and the world he understood through his experiences. Considered to be the best novel written by Jeyakantan.
Dhandapani Jeyakanthan, otherwise known as 'JK' among his friends and comrades, is a multi-dimensional personality, well known in the literary circle as a prolific writer, commentator, pamphleteer, film-maker and critic. He has won acclaim for wielding his pen against social injustices and economic inequality. Jeyakanthan was born in a family of agriculturists in Manjakuppam, a suburb of Cuddalore of the erstwhile Madras Presidency. Brought up by his mother and maternal uncles, he got interested in politics at a young age as his uncles were actively involved in it. Jeyakanthan dropped himself out of school after completing fifth grade, as he thought studies would hinder his political activism.
In 1946, he left for Chennai in search of livelihood, where he performed odd jobs, before ending up as a compositor in the printing press of Communist Party of India (CPI). His association with the CPI instilled the ideas of the movement, where he got to accompany leaders such as P. Jeevanandham, Baladandayutham and S. Ramakrishnan. The leaders of the party encouraged him to write. After graduating to an active member of the party, he got to learn about topics pertaining to world literature, culture, politics, economics and journalism. It was during this time, Jeyakanthan started writing for pro-communist magazines. Over the next few years, he established himself as one of the top-most writers in the party. His early works were first published in the party newspaper Janasakthi, and soon other magazines like Sarasvathi, Thamarai, Santhi, Manithan, Sakthi and Samaran published his works. His early works focused on the plight of slum-dwellers who were settled in and around the party office.
Jeyakanthan was married to his cousin. The couple had two daughters and a son. Jeyakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jeyakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short stories, particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel.
His writings reflect his views on the morals, ethics and the societal norms as a whole. His writings are vivid portrayals of life and relationships, with all the intricacies and beauty of reality, and with a profound love for humanity. He is one among the few of the original writers of the Tamil Literature. He is a man of insight, pride and scholarship whose writings expressed with unparalleled courage and utmost honesty speaks for all the generations to come. A winner of Sahitya Acadamy Award and Fellowship, Jnanpita Award, Soviet Land Nehru Award, the Russian Federation's Order of Friendship and the Padma Bhushan.
ஹென்றியின் கதாபாத்திரம் புதுமையானதாக இருக்கிறது - அவனுடைய கள்ளமில்லாத மனம், எதையும் சிறுபிள்ளையின் ஆர்வமிகு பார்வையுடன் புதிய சூழலை பார்க்கும் தன்மை, அவனுக்கும் அவனுடைய பப்பாவிற்கும் இடையிலான சம்பாஷணைகள் என எல்லாமே.
புத்தகம் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் எழுத்தாளர் : ஜெயகாந்தன் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் : 319 நூலங்காடி : Amazon
💫யாருடனும் ஒன்றி வாழாமல், தனக்கு இது போதுமென்று , அளவுக்கு மீறி எதிலும் ஆசை கொள்ளாது, தன் கருத்தை அடுத்தவர் மீது திணிக்காத ஒருவரை நாம் வித்தியசாமகத் தான் பார்ப்போம் . எந்தவொரு அபிப்பிராயம் கொள்ளாமல் அவனை பார்த்தால் அவன் சொல்வது சரி என்று , நாமும் உடன் படுவோம் , அந்த ஒரு மனிதன் தான் ஹென்றி.
💫தனக்கு ரத்த சொந்தமில்லாத பப்பாவிற்கும் , மம்மிக்கும் மகனாக வளர்கிறான் ஹென்றி . பெற்றோர்களின் இறப்புக்கு பின்னால் , பப்பாவின் சொந்த கிராமத்திற்கு வருகிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களே இந்த புத்தகம் .
💫எந்தவொரு கதையிலும் /புத்தகத்திலும் இதுதான் கதை என்று வெளிப்படையாக கூறாமல் , சில இடங்களில் , சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் புதிராகவே விட்டு விடுவார்கள். (வாசகர்கள் ஒரு நாள் எழுத்தாளர் ஆவதற்கு ) அப்படி சில புதிர்கள் இந்த புத்தகத்திலும் இருக்கிறது .
🔆யார் பேச்சையும் கேட்காத பேபி , ஹென்றி பேச்சை மட்டும் கேட்பது ஏன்?
🔆பப்பாவின் மனைவிக்கு என்ன ஆயிற்று ?
💫ஹென்றி குறைவான வார்த்தைகளே பேசி இருந்தாலும் , அனைத்தும் முத்துக்களே….
🔆சாமிக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் ?....
🔆ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்கு தடையாகிப் போகும் .
நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது. வாசித்து பாருங்கள் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
A fantastic feel good book! Henry's character is one of the best written characters I feel.
Henry enters Krishnarajapuram one day - with a childlike curiosity spreading joy and winning over everyone he meets. Devaraj almost immediately makes him a friend and takes him home. Soon, with his almost innate goodness wins over everyone in the village. He enters an orphan and ends up with the entire village in his house.
His relationship with his adopted pappa and mamma is also refreshing. There is no melodrama, no darkness (except in some pockets). There are multiple references to him and the Jesus Christ - and you probably feel something God-like in his free nature.
In one of the earliest lines - someone asks him if he is a Hippie and he laughs it off. The charismatic and magnetic Henry Pillai is a ray of sunshine.
ஜெயகாந்தனின் லட்சியவாதம், மனிதர்கள் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இதில் வெளிப்படுகிறது. புத்தகம் விவரிக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது ஒரு மன எழுச்சி ஏற்படுகிறது...
“ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”- ஜெயகாந்தன் ********************************************* 1973இல் முதற்பதிப்பு கண்ட, பேச்சுவழக்கில் எழுதப்பட்ட நாவல். என்னதான் ஜெயகாந்தனின் கதைமாந்தர்கள் அடித்தட்டு, வர்க்க வரிசையில் கீழ்ப்படியில் உள்ளவர்கள் என்றாலும், அறிவில் முதிர்ச்சியானவர்களாக அவர்கள் உருவாக்கப்படுவர்….பேச்சுகளிடையே போகிற போக்கில், மானுட வாழ்வியலுக்கான தத்துவங்களை உதிர்த்துசெல்லும் குருமார்கள் அவர்கள்.
கிருஷ்ணராஜபுரம், குமாரபுரம் எனும் கற்பனை ஊர்களில் கதை நடக்கிறது. சாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட மனிதனான 'ஹென்றி' என்பவன் கிருஷ்ணராஜபுரத்திற்கு பயணப்படுவதில் தொடங்குகிறது கதை. அவன் வருகிற லாரியில் உரிமையாளர் துரைக்கண்ணு, உடன் பயணிக்கும் தேவராஜன் என ஆரம்பித்து, ஹென்றி வந்த நோக்கம், அந்த கிராமத்து மக்கள், அவர்களது வாழ்வியல், ஹென்றிக்கும் அவனது தந்தைக்கும் நடந்த உரையாடல்கள், துரைக்கண்ணு குடும்பத்திடம் ஹென்றி காட்டும் பாசம், 'பேபி' எனும் புத்தி சுவாதீனமற்ற பேதை, ஹென்றி சொல்படி விசித்திரமாய் நடந்துகொள்வது என பல நிகழ்வுகளை கோர்த்து உணர்வுபூர்வமான கதையாக வழங்கியிருக்கிறார் திரு ஜெயகாந்தன். ஹென்றி, ஆங்கிலோ-இந்திய தாயால் வளர்க்கப்பட்டவனானதால், ஆங்கில உரையாடல்களாகவும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது.
உறவுகளுக்குள் பிரச்சனை, சொத்துக்கான(வீடு/நிலம்) வாரிசு பிணக்கு போன்ற பிரச்சனைகள் கதையில் இருந்தாலும், தீக்குணம் கொண்டவர், தீயவர் என எவரையும் சுட்டிக்காட்டாதபடிக்கு, பெருந்தன்மை பண்பும் நல்ல குணநலன்களுமுள்ள வெகு யதார்த்தமான கதைமாந்தர்களை கொண்ட படைப்பு இந்நாவல்.
திரு ஜெயகாந்தன் இந்நாவலின் முன்னுரையில், தன்னுடைய படைப்புகளில் தனக்கு பிடித்தமானதும் சிறப்பானதும் என இந்நாவலை குறிப்பிடுகிறார்.
இக்கதையில் வரும் அனைவரும் நல்லவர்கள் என்பதும், அதே நேரம், அவர்களை வலிந்து நல்லவர்களாக காட்டாமல், கதையோட்டத்தோடு அவர்களின் குணத்தை சொல்லி சென்ற விதமும், நமக்குள் ஒருவித 'பாசிட்டிவ்' உணர்வை கடத்துகிறது.
இன்றிலிந்து ஐம்பது வருடத்துக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்றாலும், தற்போதைய சமூகத்துக்கு தேவையானதாய் இருக்கிறது இக்கதை. இரத்த சம்பந்தம் இல்லாவிடினும், குடும்பமாய் ஒருமித்து சங்கமிக்கும் இக்கதைமாந்தர்களை போன்று, இப்படியான மனிதர்கள் சூழ் சமூகமாய் நாம் எப்போது மாறுவோம்?' எனும்படியான கேள்வியும் எழாமலில்லை. கதையின் ஒரு இடத்தில், பெருந்தன்மையின் சிகரத்தை காட்டி(ஹென்றியின் பேச்சை கேட்ட தர்மகர்த்தாவின் நிலை), வாசிப்பவரை உடையச் செய்யும்படியான நிலைக்கும் தள்ளுகிறது.
மொத்தத்தில், இந்நாவல் மூலம் வித்தியாசமான ஜெயகாந்தனை வாசித்த உணர்வை பெறமுடிகிறது. மேலும், இது ஒரு 'Feel-Good' நாவல் எனவும் கூறி பரிந்துரைக்கிறோம்.
திரு கோபுலு அவர்களின் ஓவியங்கள் நம்மடைய வாசித்தலுக்கு ஒத்துழைத்திருக்கிறது.
கதைமாந்தர்கள்: * ஹென்றி-பப்பா எ சபாபதி பிள்ளை-மம்மா எ தெரசா-மைக்கேல் * தேவராஜன்-அக்கம்மாள் (எ) அபிராமி * துரைக்கண்ணு-நவநீதம் -பஞ்சவர்ணம்மாள்-வீரசோழன்-சபாபதி * பாண்டி * மண்ணாங்கட்டி
* தர்மகர்த்தா கனகசபை முதலியார் * மணியக்காரர் ராமசாமி கவுண்டர் * கிளியாம்பா * நாகம்மாள் * வேலுக் கிராமணி * போஸ்ட் ஆபிஸ் நடராசன் ஐயர் * பேபி
1973இல் ஜெயகாந்தன் எழுதிய இப்புத்தக முன்னுரைலியிருந்து...
\ காந்திஜிய��� பற்றி ஐன்ஸ்டீன் சொல்லவில்லையா? 'வருகிற தலைமுறையில் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று சொல்லுவதை நம்புவதுகூடச் சிரமமானதாயிருக்கும்' என்று. /
\ பிறவிக்குருடனான திருதராஷ்டிரன் தனது புத்திரர்களான தருமனையும், துரியோதனனையும் அனுப்பி உலகமும் மனிதரும் எவ்விதம் இருக்கிறார்கள் என்று அறிந்து வந்து கூறப் பணித்தனன்.
தருமன் உலகையும் மனிதரையும் பார்த்து மகிழ்ந்து கூறினான்: 'புருஷர்கள் உத்தம சீலராய், பெண்கள் பதிவிரதைகளாய், மக்கள் சத்திய சந்தராய் வாழ்கிறார்கள்' என்று. துரியோதனன் சொன்னான்: 'புருஷர்கள் சோரர்களாகவும், ஸ்த்ரீகள் விபசாரிகளாகவும், மக்கள் காமூகர்களாகவும் இருக்கிறார்கள்' என்று.
குருட்டு திருதராஷ்டிரன் உலகையும் மக்களையும் தருமனைப் போலவோ, துரியோதனனைப் போலவோ அல்லாமல், அவர்கள் கூற்றினால் - முழுமையாகவும் சரியாகவும் புரிந்துகொண்டானாம்! இந்தக் கதையை ஒரு கிராமத்துக் கிழவனே எனக்குச் சொன்னான்; வியாசன் அல்ல. /
\ வாசகர்களில், விமர்சனங்களில் தருமர்களும் உண்டு; துரியோதனர்களும் உண்டு. நான் திருதராஷ்டிரன் நிலையிலிருந்தே இதனை(இந்நாவல்) எழுதினேன். /
\ நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான். /
\ இந்த கதையை நான் மிகவும் ரசித்து எழுதினேன். இது எனக்கு ஒரு விசேஷமான அனுபவம். ... 'வாழ்க்கையின் இருண்ட பகுதிகளையே காட்டுகிறவன்' என்று என்னைப் பற்றி பாமரத்தனமான ஓர் இலக்கிய அபிப்ராயம் இருக்கிறது. ஆனால் இந்த கதை வாழ்க்கையின் ஒளி மிகுந்த பகுதிகளை மட்டும் காட்டுகிறது. மனிதர்களின் பலவீனத்தையே, அழுத்தம் தந்து, ஆணி அறைந்து காட்டுவதை நான் எனது நோக்கமாகவோ செயலாகவோ கொண்டிருந்ததில்லை. எளிமையும் அதே சமயம் உயர்வும் மிகுந்த மனிதப் பண்புகள் என்னை எப்போதும் வசீகரிக்கின்றன. /
கதையிலிருந்து... \ ... (துரைக்கண்ணு) சமமான தரையில் லாரியை ஓட்டிக்கொண்டு வெகு நிதானமாக இவனைப் பார்த்து, ரொம்ப நேரமாக கேட்கலாமா, கூடாதா என்றிருந்த கேள்வியை கேட்டான்: "இந்த ஹிப்பி-ஹிப்பின்ராங்களே... அதுவா நீங்க?" "நோ" என்று அதை மறுத்துவிட்டு 'I don't know' என்று தன்னுள் முனங்கிக் கொண்டான் ஹென்றி . /
\ "கிளியாம்பா...கிளியாம்பா, நீ பார்க்கலையே அந்த சட்டைக்காரனை? இந்த அக்கம்மாளோட தம்பிக்காரன் இட்டுக்கிட்டு வந்திருக்கிறான். அவங்க வூட்டுக்கு விருந்தாடியாம்... ஏண்டி பொண்ணே, சட்டைக்காரருன்னா பறையரு, பள்ளரு போலத்தானே!... வூட்டுக்குள்ளே வுடலாமா?"
"அது இன்னாவோ போ. எனக்குத் தெரியாது" என்று கிளியாம்பாள்... /
\ "அங்கே எல்லாம் இதுக்குக் கடலைன்னு பேரு... வேர்க்கடலைன்னும்... சொல்றாங்க; மல்லாக் கொட்டைன்னு பப்பாதான் சொல்லுவார்... மல்லாக்கொட்டை - ஏன் அப்படி ஒரு பேரு?" என்று விசாரித்தான் ஹென்றி.
"மணிலாக் கொட்டைங்கிறதுதான் மல்லாக்கொட்டைன்னு 'கலோக்கியலா' ஆயிடுச்சு. இது தென் ஆப்பிரிக்காவிலேருந்து இங்கே வந்திருக்கணும். மணிலாவிலிருந்து வந்ததுனால மணிலாக்கொட்டைன்னு பேரு" என்று விளக்கினான் தேவராஜன். /
\ "மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன்கூட்டியே தீர்மானம் ஒன்னுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளை பார்க்கலாம்" என்று ஆங்கிலத்தில் சொன்னான் ஹென்றி! "அண்ட் எனிதிங் கூட் பி லைக் எனி அதர் திங் !" /
\ " காலையில பெட்டியெடுத்துக்கிட்டு எல்லாரும் வூட்டுக்கும் வந்து திண்ணையில குந்தி சவரம் செய்துட்டு போவான்(பரியாரி பழனி). அவன் போனப்பறம் திண்ணையெல்லாம் தண்ணி ஊத்தி கழுவி விடுவாங்க - அவன் தீட்டாம்... ... அந்த காலத்தில் எவ்வளவு மோசமா அவங்களை நடத்தி இருக்காங்கன்னு இப்பதான் புரியுது... சவரம்னா தலை, முகம்னு மட்டும் இல்ல... 'சர்வாங்க சவரம்' பண்ணிக்குவாங்க" /
\ அந்த ஆத்துப்பக்கம் போனால் சீனரி நல்லா இருக்கும். ஜனங்களும் இருக்கமாட்டாங்க... ஜனங்க இல்லாத இடமே ஒரு அழகாத்தான் இருக்குது. /
\ போஸ்ட் ஆபீஸ் ஐயர் தன்னை 'நடராஜன்' என்று அறிமுகம் செய்துகொண்டார். இப்போது கொஞ்ச காலமாக அவர் தன் பெயரோடு 'அய்ய'ரை சேர்த்துக்கொள்வதில்லை. /
\ 'அபீட்' ன்னா என்னா அர்த்தம் தெரியுமா? அது ஒரு இங்கிலீஷ் வேர்ட்... 'அப் -ஹிட்' தான் 'அபீட்...' என்று விளக்கினான் ஹென்றி. /
\ 'அம்பேல்' - அதற்கு என்ன அர்த்தமென்று உங்களுக்குத் தெரியுமா? என்று ஆங்கிலத்தில் கேட்டான் ஹென்றி.
"அம்பேல்னா, பசங்க விளையாடும் போது சொல்லிக்கிற வார்த்தை. ஒருத்தன் அதைச் சொல்லிட்டான்னா அவனை மாட்டி வைக்க கூடாது."
" எக்ஸாக்ட்லி ... அதுக்கு ஏன் 'அம்பேல்'னு சொல்லணும்? இதைப்பற்றி யோசிச்சிருக்கீங்களா?" என்று கேட்டுவிட்டு ஹென்றி ஏதோ கவிதைக்கு பொழிப்புரை செய்கிற மாதிரி விளக்கினான்: "அம்பேல் என்பது - (I am on bail)ஐ யாம் ஆன் பெய்ல் - வேகமாக சொல்லிப் பாருங்க. ஐய்ம் ஆம்பேய்ல். அய்ம்பேல் - அம்பேல் என்று குதூகலமாக அவன் விளக்கியது மிகப் பொருத்தமாகவும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருந்ததால் தேவராஜன் வியப்புடன், "நீங்க சொன்னது சரியா இருக்கலாம்" என்று ஒப்புக் கொண்டான்.
எனக்கு இது எப்படி தெரிஞ்சதுன்னா 'ஐ ஸ்பை' விளையாட்டும் இப்படித்தான்.(I Spy) - தான் ...மத்தியானம் அந்த பையன் சொல்லுச்சு - ஐ ஸ்பை ஆட்டத்திலேதான் 'அம்பேல்' உண்டுன்னு." /
\ "எனக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் இருக்கான்... நம்ப மாதிரி லாரி ஓட்டுறவன்தான் - தெற்கத்தியான்... நாடாரு - அவன் இந்து. அவன் பொண்டாட்டி கிறிஸ்தவ மதம்... அதுக்கு என்னா சொல்றே?"
" புள்ளைங்கே எல்லாம்? என்று குறுக்கிட்டாள் நவநீதம்.
"புள்ளைங்கல்லாம் புள்ளைங்கதான்... ஏதாவது மதமாத்தான் இருக்கணுமா என்ன? அவர்களுக்கு வயசு வந்தப்புறம் அப்பா ஜாதியா, அம்மா ஜாதியான்னு முடிவு பண்ணிக்கிதுங்க... இல்லாட்டி ஒரு ஜாதியுமில்லாம நம்ம ஹென்றி மாதிரி இருந்துட்டு போகட்டுமே.. " என்று சொல்லிக் கொண்டு வந்த துரைக்கண்ணு....
/
\ " ஸ்டில் ஐ ஹேவ் நோ எனி ரிலிஜியன்! எனக்கு மதம் இல்லை" என்றான் ஹென்றி .
" ஆனால் சாமி கும்பிடுறியே ..." என்று குறிக்கிட்டு கேட்டான் துரைக்கண்ணு.
"எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்?" என்று அவன் கேட்டது துரைக்கண்ணுவை சிறிது யோசிக்க வைத்தது. அவன் சொன்னது ரொம்பவும் சரி என்று யோசிக்க யோசிக்கப் பிரகாசமாய் புரிந்தது துரைக்கண்ணுவுக்கு. திடிரென்று தலையை உலுப்பிக் கொண்டு சிரித்து அவனை பாராட்டினான் துரைக்கண்ணு: "ச��மிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்!...சபாஷ் தொரை..." /
\ (ஹென்றியின் தந்தை எழுதிய உயிலை ,எடுத்துரைத்தபோது ).." நான் ஒரு ஹிந்து. என் மூதாதையர்கள் எல்லாம் சைவ மதத்தை நம்பி என்னென்ன மாதிரி வாழ்ந்து எப்படி சிவலோகம் பதவி அடைந்தார்களோ, அப்படியே போக விரும்புறவன் நான். நான் இறந்து போனால் இந்து வைதீக முறைப்படி என்னை தகனம் செய்ய வேண்டியது. என் பெயராலே ஒரு பிடி சாம்பல் கூட இருக்கக் கூடாது. 'நான்' என்கிறது இந்த சபாபதி பிள்ளையோ இந்த உடம்போ இல்லை. அதனால இந்த சபாபதி பிள்ளைக்கு அல்லது எனக்கு சொந்தம்னு இருக்கிற - அப்படி யாராவது இர��ந்தால் அவங்க அந்த சொந்தத்தை அவங்க கையாலே அழிக்கிறதுக்கு அடையாளமாக அவங்க கையாலேயே கொல்லி வைக்க வேண்டியது. இது ஒரு கட்டாயமோ என் இஷ்டமோகூட இல்லை. இது ஒரு வழக்கம் இதை செய்ய வேண்டியவன் என் ஸ்வீகாரப் புத்திரனான ஹென்றிதான்..." /
புத்தாண்டின் முதல் புத்தகம். நான் வாசிக்கும் முதல் ஜெயகாந்தன் புத்தகம்.
வழக்கமாக பெரிய எழுத்தாளர்கள் என்றாலோ அல்லது சமூக நாவல்கள் என்றாலோ ஒரு பயம் உண்டு. எனக்கு புரியுமா புரிந்து கொள்ள இயலுமா என்றெல்லாம் தோன்றும். மிகவும் குறைந்த விலையில் வாசிப்பாளர்கள் அனைவரும் கொண்டாடும் புத்தகம் என்பதால் வாங்கி தான் பார்ப்போமே என்று வாங்கினேன்.
ஒரு கதையில் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள். ஆனால் கதைமாந்தர்கள் முழுவதும் நல்லவர்களாக இருந்தால், போரடிக்க வேண்டும் இல்லையா? அதுதான் இல்லை, கதையை நகர்த்த கெட்டவர்கள் தேவைப்படவில்லை. வெகு இயல்பாக நேர்த்தியாக ரசிக்கும் பாணியில் எழுதி இருக்கிறார்.
அப்பாவிற்கும் பிள்ளைக்கும் நடக்கும் உரையாடல்கள், வாழ்க்கையை கற்று கொடுக்கும் முறை அனைத்துமே அட்டகாசம். ஹென்றியை போல் வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பொறாமையை விதைக்கிறது.
கதையில் வரும் துரைக்கண்ணு, அக்கம்மா, கிளியாம்பா, மணியக்காரர், தேவராஜன், பிச்சி பெண் அனைவருமே கவர்கிறார்கள்.
Prior to buying the book, I went to see the comments section. Almost everyone said, that the character Mr. Henry, would say in our minds for a long time.
But I would say; not only it is Mr. Henry, characters like Akkamal, Jeyaraj, Thoraikannu, Maniyakarar and Baby has been carefully handled, so that they would also stay with us for a long time. On a deep thought, we see people of those sorts in our day to day life.
Only a person, who has gone through various walks of life can give a fiction of this sort.
Some phrases from the book!
"Soap enga appa" "Is there any correlation between relationship and God"-Henry Pillai "I like drinking koozh, but I cant force someone to drink it because I like drinking it" "Why did she leave?", Asked henry himself. "Why she came?", was his answer.
அருமயான வாசிப்பு அனுபவம் தரும் புத்தகம், எளிமையான நடையில் ஒரு மகத்தான வாழ்வு முறை பற்றி விளக்குகிறார் ஜெயகாந்தன். பொதுவாக நாம் யார் என்ற கேள்விக்கு நம் பெற்ரோர், ஊர்,மதம், சொந்தங்கள் மூலம் விடை அளிப்போம், இதில் ஹென்றி என்பவன் இது ஏதும் இல்லாமல் தான் யார் என்று நிறுவி அனைவரின் அன்பையும் பெறுகிறான் . படிக்கும் பொழுது இப்படி ஒருவன் இருக்கவே முடியாது என்றுதான் தோன்றும் ஆனால் படித்து முடித்த உடன் நம்மால் ஏன் இப்படி இருக்க முடியவில்லை என்ற கேள்வி எழும் அது தான் இந்த புத்தகத்தின் வெற்றி என்று நினைகின்றேன். நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
சில புத்தகங்கள் நம்மை விட்டு என்றும் பிரியாமல் நமக்குள்ளே ஒரு அங்கமாகவே ஆகி விடும். இந்த புத்தகம் நான் முதல் முதலாக வாசித்தது 5 வருடங்கள் முன்னால். எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வாசிக்க நேர்ந்தேன். ஆனால் அதுவே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அங்கம் ஆகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்ற போது மீண்டும் இந்த புதினத்தை படிக்க ஒரு ஆவல். முடிவை எடுக்கும் தருணத்தின் முன் ஹென்றியுடன் அவன் ஊருக்கு சென்று வருவோம் என்று நினைத்து இப்புதினத்தை மீண்டும் படித்தேன். துரைக்கண்ணுவுடன் அவனது லாரியில் பிரியாணிக்கும் ஹென்றி என்ற அசலூர்காரனில் இருந்து கதை ஆரம்பமாகிறது. கிருஷ்ணராஜபுரம் நோக்கியுள்ள அந்த பிரயாணத்தின் போதே அந்த லாரியில் உள்ளவர்களிடம் நட்பு கொள்கிறான். அதுவும் தேவராஜ் என்ற ஒரு பள்ளி ஆசிரியர் அவனிடம் நல்ல பழகுகிறார். அந்த ஊரில் உள்ளதனது வீட்டிற்கு விருந்தாளியாக கூட்டி செல்கிறார். நாட்கள் போக போக அவனது வெள்ளந்தியான சுபாவத்தால் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறான். தேவராஜின் வீட்டிற்கு எதிரில் உள்ள பாழடைந்த வீட்டை அவர் சொந்தமாக்க ஆசை படுகிறார். ஏன் இந்த ஆசை? எதற்க்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறார்? ஹென்றியின் பின்னணி என்ன? அவர் மற்றவர்களில் என்னவெல்லாம் மாற்றங்கள் கொண்டு வருகிறார்? என்று சொல்கிறதே இந்த கதை. அது தான் கதை என்று மேலே நான் சொன்னாலும் எனக்கு அது மட்டுமாக படவில்லை இந்த புதினம். எழுத்தாளரின் நடை மிக அருமை. நம்மை ஹென்றியுடன் ஒரு பயணத்திற்கு இட்டு செல்கிறார் ஜெயகாந்தன். அவரின் மற்ற புதினங்களில் காணாத ஒரு சிறப்பு இதில் என்னால் காண முடிந்தது. நேர்மையான அணுகுமுறையால் நம் அனைவரும் ஹென்றியினூடே கவர்கிறார் எழுத்தாளர். உண்மையா இல்லை கற்பனையா என்று நம்மை சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது ஹென்றி மற்றும் அவர் தந்தை என்ற இரண்டு பாத்திரங்களும். எல்லாவற்றிலும் நன்மையை மட்டும் காணும் அவர்களது குணம் மற்றும் தன்னிடம் உள்ளத்தில் சந்தோசம் அடைவது என்ற குணம் இது ரெண்டும் நமக்குள் ஆழமாக பதிய வைக்கிறார் ஜெயகாந்தன். ஹென்றி, அவரின் தாய் தந்தை, துரைக்கண்ணு மற்றும் அவர் குடும்பத்தவர், தேவராஜ் மற்றும் அவர் அக்கம்மாள், மணியக்காரர், பாண்டு எல்லோருமே அவ்வளவு அழகாய் வரையப்பட்டிருக்கிறார்கள். இத்தனை கதாபாத்திரங்களும் இந்த உலகத்தில் தானா இந்த கதை நகர்கிறது என்ற அளவுக்கு அந்த பாத்திரங்கள் அவ்வளவு அன்யோன்யமாக பழகுகிறார்கள். ஹென்றியிடம் காணும் தன்னிறைவு தான் என்னை இந்த புத்தகத்தில் மிகவும் கவர்ந்தது. அப்பா அம்மாவுடனான ஹென்றியின் பிணைப்பு ஒரு புதிய அனுபவத்தை தந்தது. கிராமத்து வாழ்க்கையை ஏளனமாக நினைக்கும் தேவராஜுடன் சேர்ந்து அந்த ஊர் வாழ்க்கையை கண்டு ஹென்றி சந்தோசம் அடைகையில் தேவராஜுடன் சேர்ந்து நாமும் அவன் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளும் விதத்தை கண்டு மகிழ்கிறோம்! வியக்கிறோம்!புதினம் முழுதும் ஒரு கெட்ட கதாபாத்திரம் கூட காண நேரவில்லை. எல்லோருக்குள்ளும் நன்மை இருக்கின்றது என்பதை முன்வைக்கிறார் போலும் ஜெயகாந்தன். எப்போதும் போலவே அவர் எழுத்துக்கள் எளிமையானதாகவும் அதே நேரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தி���ும் இருந்தது. கடைசியில் வரும் அந்த பெண் புதிராகவே வந்து செல்கிறாள். இருந்தும் பல அர்த்தங்கள் அவளுள். நான் முதலில் சொன்னது போல் மனக்குழப்பம் அடைந்திருக்கும் நிலையில் அடிக்கடி ஹென்றியுடன் கிருஷ்ணராஜபுரம் சென்று வருவதுண்டு. அவனுடன் சேர்ந்து துரைக்கண்ணு மற்றும் தேவராஜுடன் சற்று நேரம் உரையாடி வருகையில் எப்பொழுதும் போல இந்த வாட்டியும் மனதில் ஒரு தெளிவு. என்றும் எப்பொழுதும் நம்மை சுற்றியிருக்கும் நன்மை, அன்பு, பாசம் என்பவற்றை கொண்டாடும் ஒரு படைப்பே இந்த புதினம். அதன் தலைப்பின் முக்கியத்துவம் இந்த புதினம் வாசிக்கையில் நாமே தெரிந்துகொள்ளலாம். இந்த மகத்தான படைப்பை வாசிப்போம் வாழ்க்கையை அன்பை கொண்டாடுவோம்.
Breathtakingly good, world class literature! Alternating between pages that make one wonder if this could be true, and ones that make one long for it to be true, this book is full of brilliant moments that are bound to remain green in the reader's memory. And the characters have been fleshed out so very well that it's a wonder the plot stays so tight, never meandering once. Also, this is a soothing story that's an example of the healing powers of literature.
தளபதி படத்துல வர மாதிரி அனாதையா விடபட்ட ஹென்றி என்ற ஒரு மனிதனின் கதை. யாரோ ஒரு புண்ணியவானால் எடுத்து வளர்க்கப்பட்டு, பின் நாளில் ஒரு ஊருக்கு சென்று என்ன செய்கிறான்? அங்குள்ள மக்களுடன் நட்பு எப்படி?.... இப்படி அவனை சுற்றி நடக்கும் கதையே "ஒரு மனிதன் , ஒரு வீடு, ஒரு உலகம்" கண்டிப்பா படிக்க வேண்டிய நாவல்!!
"ஹென்றி"-சபாபதி பிள்ளையின் வளர்ப்பு மகன். தன் உண்மையான பெற்றார்,தன் மதம், மொழி,இனம் என எதுவும் தெரியாது. தன் வளர்ப்பு பெற்றோரின் அரவணைப்பிலே வளர்கிறான். இருவருமே வயதாகி பின் இறந்து போகிறார்கள். அப்போது தன் வளர்ப்பு தந்தையின் (பப்பா என்று தான் ஹென்றி அழைப்பான்) சொந்த ஊருக்கு வருகிறான். அவரது உறவினர்கள் இவனை ஏற்றுக்கொண்டார்களா? பப்பாவின் சொத்துக்கள் என்ன ஆகிற்று? ஹென்றி அவற்றை எல்லாம் வைத்து என்ன செய்கிறான் என்பதே கதை.
ஜெயகாந்தன் இந்த புத்தகத்தை மிக மிக எளிய நடையில் படைத்திருப்பது மற்றும் ஒரு அழகு. ஹென்றி-அனைத்தையும் அனுபவித்து ரசித்து வாழும் ஒரு அழகான கதாபாத்திரம். ஹென்றி-பப்பாவின் உரையாடல்கள் எல்லாம் சிலாகித்து கொண்டே இருக்கலாம்.
அனைவருமே நல்லவர்களாகவும், அனைத்துமே அழகாகவும் இருக்கும்!
“சாமிக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்…!" “மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்” இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த ஹென்றியின் வசனங்கள்!
1973 இலே சாதி மத வேறுபாடின்றி, ஒருங்கிணைப்புடன் கதாபாத்திரங்களை படைத்திருக்கிறார்!
அன்பா இருந்தா எல்லாமே அழகா தான் தெரியும்! நிறைவான மனிதர்கள், அழகான உரையாடல்கள், நெகிழ்வான சம்பவங்கள் என அன்பால் நிறைந்து வழிகிறது இந்த புத்தகம்!
"இந்த கதையை நான் மிகவும் ரசித்து எழுதினேன். இது எனக்கு ஒரு விசேஷமான அனுபவம்" என்று முன்னுரையில் ஜெயகாந்தன் எழுதியிருப்பது வாசகர்களுக்கும் பொருந்தும்.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் இந்த தலைப்புக்கு ஆகவே இந்த நாவலை படிக்கலாம். இது ஒரு அருமையான நாவல் இதில் வரும் ஹென்றி கதாபாத்திரம் போல இந்நாவலை குதூகலத்துடனும் , சுவாரசியமாகவும், ரசிக்க முடிகிறது. இந்நாவலை படித்து முடிக்கும் போது ஒரு வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. படிக்க தோன்றும் புத்தகம் இது.
This is a weird book. I didnt hate it but didnt understand the point of it either. Reviews here are full on about a certain character which kind of is the point. Something is missing.
கதை மாந்தர்கள் பலரும் அவர்களுக்கே உரித்தான பாணியில் நம்மை வசீகரப் படுத்துகிறார்கள். கதையின் நாயகன் ஹென்றி பிள்ளை போல ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது..
கிருஷணராஜபுரம் ஊரும் அதில் வாழும்/வாழ்ந்த மனிதர்களை பற்றி பப்பா சபாபதி பிள்ளை சொன்ன கதைவழியே அறிந்தவன் ஹென்றி. சபாபதி மறைந்த பின் மகனே என ஆசையோடு இனி யார் அழைப்பார்கள் என அவர் நினைவில் ஆழ்ந்தவன் அவர் வாழ்ந்த அந்த ஊருக்கு சென்றான். அந்த ஊரில் அவன் சந்தித்த துரைக்கண்ணு பிள்ளை, பாண்டு, தேவராஜன், நாகம்மா, கிளியாம்பா, அபிராமி (எ) அக்கம்மா, மண்ணாங்கட்டி, மணியக்காரர் ராமசாமி கவுண்டர், போஸ்ட் நடராஜன் இவர்களுக்கு அவன் ஒரு அந்நியனாக தெரிகிறான் இவன் எதற்காக இங்கே வந்தான் இவனுக்கு இங்கு என்ன வேலை? என்பதற்கான விடையே ஒரு மனிதன்… ஒரு வீடு… ஒரு உலகம்… கதை. -கலைச்செல்வன் செல்வராஜ்.
ஒரு மனிதன்… ஒரு வீடு… ஒரு உலகம்… என்னை கவர்ந்த சில வரிகள்
மண்ணாங்கட்டி இந்த தமிழ் பெயர்க்கு இணையான ஆங்கில பெயர் ‘ராக், ஸ்டோன், வுட், ஸாண்டீ… ‘ என ராக்கிங்காக இருப்பதாக ஹென்றி நினைக்குமிடம் நம்மையும் அட ஆமா!!! என ஆச்சரியப்படவைக்கிறது.
சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்…!
உயிர் பொழைச்சால் போதும்னு மனுஷங்க ஓடறப்போ அவன் எவ்வளவு நல்லவனா, அடக்கமானவனா, நெறைஞ்ச அன்பு உள்ளவனா இருக்கான் தெரியுமா…? -ஜெயகாந்தன்.
என்னுடைய வாசிப்பை நான் துவங்கியது இந்த புத்தகத்திலிருந்து தான். இன்று நான் புத்தகத்தின் மீது பித்து பிடித்து திரிவதற்கு இந்த புத்���கம் தான் முதல் படியாக இருந்திருக்க கூடும் என நான் நினைக்கிறேன. ஒரு வருடம் கழித்து இந்நூலை மறுவாசிப்பிற்கு உட்படுத்திய போது பேரின்பத்தில் திளைத்தேன்.
ஒரு சில feel good படங்கள் எப்படி நாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்புத் தட்டாதோ அதேபோலத்தான் இந்நாவலும், வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் மனதில் எழும் இன்புணர்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது அப்படி மனதை கட்டி அணைத்துக் கொள்ளக்கூடிய ஒரு செவ்வியல் படைப்பு. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு சாகித்திய அகடமி வாங்கி இருந்தாலும் பெரும்பான்மையோர் இந்நூலை தான் அவரின் ஆகச்சிறந்த படைப்பாக கருதுவார்கள்; அதுதான் உண்மையும் கூட; வாசித்தால் நீங்களும் அதேதான் உணருவீர்கள் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
இதில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமும் வாழ்வும் அந்த வாழ்க்கையின் பிம்பத்தை நம் கண் முன்னே காண்பிக்கிற வகையில் வாசிக்கும் போது உணரக்கூடும். இந்நாவலில் ஹென்றி என்கிற கதாபாத்திரத்தை பற்றிதான் பலரும் பேசுவார்கள் ஆனால் என்னை பொருத்தவரை ஹென்றியை இப்படி வளர்த்து ஆளாக்கின அவர்களின் பெற்றோர்களைத் தான் நான் அதிகம் நேசித்தேன். குறிப்பாக அவனுடைய தந்தை. நாவலினில் அவர்களின் பங்கு குறைவாகவே இருந்தாலும் ஹென்றி இப்படி வாழ்ந்திருப்பதற்கு அவர்கள் வழிநடத்திய விதம்தான் இங்கு அவனின் வாழ்வாக நம் கண் காண்பிக்கப்படுகிறது. ஹென்றியின் மூலம் மதம், ஜாதி, இனம் இவை எல்லாவற்றையும் கடந்து மனிதத்தோடு ஒருவன் வாழ்ந்தால் எப்படி வாழ்வான் என்பதை பட்டவர்த்தமாக காண்பித்து இருப்பார். இப்படி இருக்கும் மனிதனின் பார்வையும் என்னோட்டமும் அழகைத் தவிர வேறு ஒன்றையும் மனம் காணாது என்பதை வாசிக்கும் ஒவ்வொரு பக்கமும் உணர்த்திக் கொண்டே இருப்பார்.
இப்படி பேரின்பம் அடைந்து நாமும் ஏன் ஹென்றியைப் போல முடிந்தவரை வாழப்பழகிக் கொள்ளக் கூடாது என ஏங்கியதுண்டு. க்ஷ நாம் அதில் முயற்சித்து தோல்வி அடைந்தாலும் நம்முடைய பிள்ளைகளையாவது அவ்வாறு வாழ வைக்க வேண்டும் என்று முயற்சிப்போம் - சுதந்திர மனிதனாக. பல மாதங்கள் கழித்து வாசித்த போதும் புதுமை குறையாமல் இருந்தது. முடிந்தவரை சந்திக்கும் நபரை அன்போடு பார்த்து முன் அனுமானம் இல்லாமல் பழகுவோம் - மனிதத்தோடு.
I have read Jayakanthan before but this book is something different. I finished this book in one sitting which never happened with Jayakanthan's other works. What stand different is the protagonist Henry in this novel. He shows the life in a positive & different way. A classic modern tamil novel. A must read.
Jayakanthan is my all time favorite time writer...This book is one of his master piece work....The way character of Henry in this story is portrayed is too good...Want to read this book once again..
I Enjoyed reading this book. Was Hendry a hippi? Interesting plot. Amazing story knitting techniques. Why did I keep expecting a twist towards the end!
I have always secretly thought about conceiving or writing a story that has absolutely no conflict within it. And I thought I would probably be the first one who shall be writing it in the future given there is no providential interference . But here is it! Jayakanthan has already written one.
The reason why there is no conflict here in the novel is because there are absolutely no bad characters here and everyone in the novel are good people. Again I do not want to imply that conflict is completely impossible between good people. I am just saying people here are so flexible and accommodating to everyone else that they are fairly contented to be part of the 'societal sea' that is the village and that is precisely why there is no conflict in the story. And the reason why I am stressing upon this 'lack of conflict' trope is there might be phases in our lives where we had had no complaints with people around us during that particular phase in our time and when someone comes asking us how we were doing at that point of time, we mostly would have had nothing interesting to tell them.
So what I am trying to convey here is in the event of a complete absence of antagonistic characters, I used to think that it is not possible to narrate a good story that might be interesting to others. But how easily Jayakanthan was able to break this notion of mine! He just sits and observes a small episode in Henry's life where he is moving on from his father's death and installing a life for himself in a small, idyllic village. If you think this is a story where there is no scope for any dramatic juice, you are completely right. And Jayakanthan is also not interested in milking anything from this premise. He just enters Henry's mind and in a stream-of-consciousness mode, explores what goes inside his head in the first half of the novel and in the next half or so, we see how this man/boy of a curious upbringing adapts himself to the pleasant, not-so-taxing whims of rural life.
It is a fine portrait to say the least and in today's world dominated by social media where every event is supposed to be tainted with some political/racial/casteist colour, the exploration of Henry's psyche and his 'embrace-all' approach comes to us as a refreshing whiff of air.
There is no plot in this book. Henri is an ageless, casteless, religionless man who belongs to the whole world but is a man with a whole world within himself. He makes a friend in Devaraj who is antithetical to Henri in every sense. He is a man who expects a lot from the world, judges everyone around him, thinks himself superior to others and despises certain practices of the people surrounding him. I am making Devaraj to be a bad person. He is not. He is the way every adult intelligent person is in this world now. But Henri manages to show him that it is possible to live in a way entirely different from him and still be completely natural. It is very difficult to get a sense of Henri and his character. He seems almost too passive to play such an important role in his own story. Sometimes it is a little frustrating and the book meanders through certain parts. But the ending with the entrance of baby the naked girl and her disappearance make the book unexpectedly poignant. What does she stand for? Is she the epitome of the mental state that every human should strive to achieve? Is she a much more evolved version of Henri himself?
There are other characters in the book like duraikannu the brother and his family. He is a character who is steeped in the life of the village. He is stoned all the time and drives a lorry for living. Somewhere in the middle of the book I almost thought there is going to be some conflict between him and Henri. But no, everything fizzles out in the panchayat with both of them outperforming the other in their generous nature. Akkamma and kiliyambal are the usual tragic female characters who live to serve their male family members: jeyakantan is no different from the usual misogynistic writing of his generation. Why is there a suicide plot line at the end? Was it added because suddenly jeyakantan realised his book did not have a single plot and decided to add something dramatic at the end? It seemed totally unnecessary and melodramatic and came out of nowhere! If something like this had happen to Devaraj or duraikannu it would have been interesting to see Henri’s reaction. But this thing kind of fizzles out.
I really enjoyed the book inspite of some of its flaws and highly recommend it! Btw the writing was brilliant. The way jeyakantan describes certain scenes just make them appear in front of our eyes. His long sentences to cover all the people is like taking a panoramic photograph of the scene. It is simple elegant and very well written. I loved his language.
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி 1973 இல் வெளிவந்த நாவல் இது. 2023, இந்நாவலின் ஐம்பதாவது ஆண்டு. வெளியாகி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு புத்துணர்ச்சி மிக்க பிரதியாக விளங்குவதே இந்த நாவலை ஒரு கிளாசிக் படைப்பாக்குகிறது
எழுபதுகளின் தமிழ் கிராமம் ஒன்று எப்படி இருந்திருக்கக் கூடும். சாதிய கட்டுமானம், நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களின் தாக்கம் என்று சற்றே இறுக்கமான சமூகமாக தானே இருந்திருக்க வேண்டும்.
அத்தகைய ஒரு கிராமத்திற்குள் தனது வளர்ப்பு தந்தையின் பூர்வீகம் தேடி வருகிறான் ஹென்றி. அங்கு ஹென்றி பெறுகின்ற அனுபவங்களும், அவனது அப்பாவின் கிராமம் அவனை ஏற்றுக் கொண்டதா? இல்லையா? என்கிற கேள்விக்கும் பதிலாக விரிகிறது இந்த நாவல்.
வெளி உலக மாற்றங்களோடு அதிக தொடர்பில்லாத மனிதர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு விடுதலை உணர்வோடு கூடிய ஒரு உலக பொது மனிதனாகவே வருகிறான் ஹென்றி.
இப்படி ஒரு கதாபாத்திரம் தனக்கு முரணான சூழலைச் சந்திக்கும் போது உருவாகும் எதிர்மறை உணர்வுகள் எதுவும் இதில் சொல்லப்படவில்லை. ஹென்றி தனது பப்பாவிடம் ���ொண்டுள்ள பிணைப்பு அவனை அந்த கிராமத்து மனிதர்களிடம் நெருங்கி பழக வைக்கிறது. மனித உறவுகள் எந்தவிதமான சிக்கல்கள் இல்லாமல் பரிணமிப்பதும், அதன் மூலம் வாசகன் நல்லுணர்வு பெறுவதும் ஒரு ரசவாதமாக வாசிப்பின் போது நடந்தேறுகிறது.
ஹென்றியின் ஆளுமையை ஜெயகாந்தன் உருவாக்கி இருக்கும் விதம் என்னை ஈர்த்தது. நாம் இன்று உருவாக்கி வைத்திருக்கும் ஜாதி, மதம், இனம், மொழி, தேச எல்லைகள் போன்ற எந்த வரையறைள்ளும் அவனை நீங்கள் அடைத்து விட முடியாது. வாழ்க்கையைப் பற்றிய அவனது அவதானிப்புக்கள் புரட்சிகரமானவை. நாம் காலாகாலமாக உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகளை உடைத்தெறிப்பவை. அதே நேரம் சக மனிதன் மீது பரிவும் நேசமும் கொண்டு அவனையும் சமமாக மதிக்க கற்றுத் தருபவை.
மானுட விடுதலையின் மீது தீராக் காதல் கொண்டுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய தமிழின் ஒரு feel good நாவல் இது.
Each and every character of the novel had a great impact in the story. The whole read had a very positive vibe to it. A very good feeling, with each of the people. This book taught us to see the beauty in the simplest of things.