#209 Book 50 of 2023-அவளும் அவனும்:சமுதாயமும் சாயமும் Author- பிரதிக்ஷா
“அவனின் சிரிப்பில் அடைந்திருக்கும் வலிகளுக்கு நான்கு சுவர்களும் ஒரு ஜன்னலும் ஆறுதல் தாலாட்டுப் பாடியது.”
Firstly, congratulations to Prateeksha for deciding to write on this topic! What a bold attempt🤍
“சமுதாயம்” என்ற கட்டமைப்பில் தான் எல்லாமும் இங்கே இயங்குகிறது.நாம் என்ன செய்ய வேண்டும்,எப்படி செய்ய வேண்டும்,எப்போது செய்ய வேண்டும் என எல்லாமே ஏதோ ஒரு வகையில் நம் மீது திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது.ஆண்,பெண் என்ற பாலின வகைப்படுத்துதலுக்குக் கீழ்-ஆண் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்,பெண் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என எதற்கெடுத்தாலும் ஒரு கட்டமைப்பு.அந்த கட்டமைப்புகளை முன்வைத்து தான் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.குறுங்கதைகள்,கவிதைகள் என 29 தலைப்பின் கீழ் தன் கருத்துகளை இதில் படைத்திருக்கிறார்.
இதில் சமுதாயத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே நமக்குள்ளும் கேள்விகளாய் எப்போதோ புதைக்கப்பட்டிருக்கும்,பெரும்பாலான சம்பவங்கள் நமக்கே நடந்திருக்கும்.அந்த Relatability Factor தான் இந்த புத்தகத்தை இன்னும் சுவாரஸ்யம் ஆக்குகிறது.
இதில் பேசப்பட்டிருக்கும் எல்லா பிரச்சினைகளும் இன்றளவும் நாம் பார்த்தும் கடந்தும் தான் வருகிறோம்.”சமுதாயம்” என்ற ஒன்றால் நம் வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்! எத்தனை ஏமாற்றங்கள்! நமக்கே தெரியாமல் நாமும் இந்த கட்டமைப்புக்குள் வாழ பழகி விட்டோம். அந்த தாக்கத்தின் வெளிப்பாடு தான் இந்த புத்தகம்.
இதை படிக்கையில் உங்களுக்கு சமூகத்தின் மேல் கோபம் வரலாம்! அவலங்களை எண்ணி அழுகைக் கூட வரலாம்! இதை கடந்து போக கனமாகவே இருந்தது, கனமாகவே இருக்கிறது!
“பிரதிக்ஷா”வை எனக்கு கடந்த 7 மாதங்களாக தெரியும்.ஒவ்வொரு முறை அவரோடு உரையாடும் போதும்,ஏதோ ஒரு தாக்கத்தை அவரது உரையாடல்கள் ஏற்படுத்தும். பிரதிக்ஷாவுக்கு இந்த சமுதாயத்தின் மீதிருக்கும் அக்கறைக்கும்,கருத்துகளுக்கும் இந்த 116 பக்கங்கள் குறைவே! பிரதிக்ஷா இன்னும் நிறைய தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் என் ஆசையும்! Because the Society needs it❤️
A captivating exploration of the innermost feelings of oppressed genders, shedding light on the discrimination they face in society. Through poignant verses, the author fearlessly confronts regressive thoughts and traditions, urging readers to break free from societal constraints and embrace their true selves. One of the most striking aspects of the book is the author's masterful use of language. Themes of freedom and adventure permeate the pages, mirroring the untamed beauty of nature itself. The author encourages readers to embrace their wild spirit and explore the world with courage and curiosity.
நம்மை சுற்றி நடக்கும் பல பாகுபாடுகள், வேற்றுமைகள், முடக்கங்கள், கொடுமைகள், அனைத்துமே ஒரு வகையில் இந்த சமுதாயம் நம்முள் திணித்த எண்ணத்தினால் வளர்ந்தவை.
அப்படியான எண்ணங்கள் எவ்வாறு ஒரு பெண்ணையும் ஆணையும் பாதிக்கிறது, அவ்வெண்ணங்களின் சாயம் எப்படி நம் மீது படிந்து விடுகிறது என்பதை மிக துல்லியமாக பக்குவமாக இந்நூலில் எடுத்து வைத்துள்ளார் பிரதீக்ஷா.
இந்த புத்தகத்தை ஒரு பெண்ணியம் நூலாக எடை போட்டுவிட வேண்டாம். பிரதீக்ஷா ஆண், பெண், இருவரும் சந்திக்கும் துன்பங்களையும், அவை எங்கிருந்து, யாரால் விதைக்கபடுகின்றன, இதனால் எப்படியான நிலைக்கு ஒரு தனி நபர் தள்ளப்பட்டுள்ளார் என்று கவிதைகளாலும், கதைகளாலும், ஒவியங்களாலும் தெரியப்படுத்தி இருக்கிறார்.
ஒரு நபர் எப்படி நடக்கணும், பேசணும், அழனும், சிரிக்கணும், இப்படி எல்லாவற்றையும் அவர் பாலினம் வைத்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று வார்த்தைகளால் ஒலியெழுப்பும் புத்தகமாக இந்நூல் வாசிப்போரை சிந்திக்க வைக்கிறது.
எந்த ஒரு இடத்திலும் தனது நடுநிலையை பரிகொடுக்காமல், ஆண், பெண், இருவரையும் முற்றிலும் சமமான தராசில் வைத்து இந்நூலை எழுதிய பிரதீக்ஷாவை பாராட்டியே ஆகவேண்டும்.