love and romance... சொக்கனின் கார் நிற்பதை கண்டு திடுக்கிட்டு போனாள்… அவளுக்கு பயத்தில் நெஞ்சு வேகமாக துடித்தது… காரில் அமர்ந்திருக்க சொக்கன் இவளையே இமைக்காமல் பார்க்க… நடுக்கத்துடன் கார் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தவள்… எதுவும் பேசாமல் கார் கதவை திறந்து அதில் ஏறி அமர்ந்து கொண்டாள்… எடுத்தும், அதிவேகத்தில் காரை இயக்க ஆரம்பித்தான் சொக்கநாதபாண்டியன்…
நான் நிரஞ்சனுடன்.. வண்டியில் வந்து இறங்கியதை, இவன் பார்த்திருப்பான் என்பதை யூகித்து கொண்டவள், பீதியுடன் அமைதியாக அமர்ந்து வந்தாள்… காரானது எப்போதும் செல்லும் பாதையில் இருந்து மாறி, வேறு பாதையில் செல்வதை தாமதமாக கவனித்தவள்.. அவனிடம் கேள்வி கேட்க பயந்து, அமைதியாக இருந்து கொண்டாள்… இன்று..