Jump to ratings and reviews
Rate this book

சொல்வழிப் பயணம்

Rate this book
மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் சக மனிதர்களின் சந்திப்புகளுமே அவனை வழிநடத்திச் செல்கின்றன. வாழ்வில் ஏதோ ஒரு சோதனையில், விரக்தியில் இருக்கும்போது அதிலிருந்து நம்மை நகர்த்திக்கொண்டு செல்வது எத்தனையோ நிகழ்வுகளும் சந்திக்கும் சக மனிதரின் சந்திப்பும்தான். ஆம், தனி மனிதனின் வாழ்வு சக மனிதர்கள் எனும் தொடர்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் பவா செல்லதுரை தான் சந்தித்த மனிதர்கள், எதிர்கொண்ட சூழ்நிலைகள், தன்னைச் சந்தித்தவர்கள் பகிர்ந்துகொண்ட செய்திகள், தன் நண்பர்களின் வாழ்க்கை ஆகியவற்றை சொல்வழிப் பயணமாக ஆனந்த விகடனில் எழுதினார். தனி மனிதர்களின் செய்திகள், நடந்த சம்பவங்கள் என்பதை மட்டும் சொல்லாமல், அந்த மனிதர்கள் வாழ்வு, நடந்த சம்பவங்கள் சமூகத்தோடு எப்படித் தொடர்புகொண்டுள்ளன, சமூகச் சீர்குலைவை, மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் பவா செல்லதுரை. பவா செல்லதுரையோடு சொல்வழிப் பயணத்தைத் தொடருங்கள்.

183 pages, Kindle Edition

Published July 1, 2023

5 people are currently reading
16 people want to read

About the author

Bava Chelladurai

15 books93 followers
Bava Chelladurai is an Indian writer, storyteller, and actor. He is also an activist and is part of a jury that is against the murders of Dalits.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (41%)
4 stars
5 (41%)
3 stars
2 (16%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
252 reviews33 followers
February 27, 2024
புத்தகம்: சொல்வழிப் பயணம்
எழுத்தாளர்: பவா செல்லத்துரை
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
பக்கங்கள்: 183
நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2023
விலை: 250

💫 சமூக வலைத்தளங்களில் தனது கதைச் சொல்லும் திறமையினாலும், ஜோக்கர் மற்றும் ஜெய்பீம் போன்ற திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையினாலும் நம் மனதைக் கவர்ந்த கதைச் சொல்லி பவா அவர்களின் கட்டுரை தொகுப்பு இது.

💫 விகடனில் 25 வாரங்கள் தொடராக வெளிவந்து, இப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது. ஆகச் சிறந்த திரை கலைஞர்களான இயக்குனர் பாலுமகேந்திரா மற்றும் கவிஞர் நா. முத்துக்குமார் ஆகியோரின் சிறப்புகளை நான் அறிந்துக் கொண்டது இவர் பதிவுகளின் வாயிலாக தான்.

💫 இவரின் பல பதிவுகளையும் பார்த்திருந்தாலும் - இவரின் படைப்பை படிப்பது இதுவே முதல் முறை.

💫 சொல்வழிப் பயணம்: தான் சந்தித்த மனிதர்கள், பாதித்த நிகழ்வுகள் அதனின் தாக்கங்கள் என அனைத்தையும் இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

💫 மனிதன் தனக்கு ஏற்படும்/நிகழ்த்தப்படும் உணர்வுகளில் மிக பாதிக்கக்கூடியது அவனுக்கு நேரும் அவமானம் தான். எழுத்தாளர் மண்டோ அவர்கள் எழுதிய "அவமானம்" என்ற கதையில் வரும் சுகந்தி மூலம் சொல்கிறார்.

💫 கு. அழகிரிசாமி யின் கதை ஒன்றில் பஞ்சத்தின் காரணமாக, தமிழகத்திற்கு பிழைப்பு தேடி வரும் தாய், மகள், ரோட்டில் கிடக்கும் வெள்ளரிப் பிஞ்சை எடுப்பதா வேண்டாமா என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள் ---- "பசியின் ரணம் மனிதனின் மனதை எதற்கும் தயார்படுத்தும்"-பவா செல்லத்துரை.

💫 மனிதர்களின் மூர்க்கத்தனத்தை சொல்லும் போது மிருகம் போல் நடந்துக் கொள்ளாதே என்று சொல்கிறோம். யானை மீது நெருப்பு டயரை எரிந்தது , வனத்திற்குள் செல்லும் போது, கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பொருட்கள் என நம் மிருகத்தனத்தை காட்டுகிறோம். மனிதர்களை விட விலங்குகள் பல மடங்கு உயர்ந்தவைதான்.

💫 இது மட்டுமல்ல, சொந்த நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்களின் துயரம், நம்பிக்கை துரோகம், தற்கொலை எண்ணம், சிறுவர் சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள்.. இன்னும் பல.

💫 இந்த 25 கட்டுரைகளை வாசிக்கும் போது நிச்சயமாக நம் வாழ்விலும், ஏதோ ஒரு இடத்தில் அந்த உணர்வை கடந்து தான் வந்திருப்போம்.

💫 எண்ணற்ற புத்தகங்களையும் பரிந்துரை செய்திருக்கிறார்.

💫 இந்த வருடம் படித்த படிக்க போகிற புத்தகங்களுள் ஆகச் சிறந்த புத்தகம் இது.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .


சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Surendhar.
54 reviews1 follower
August 23, 2025
I was about to give 2 stars but after few chapters I could sense the author was improving in his writing. And the referenced stories and incidents became interesting. Overall a good read.

I would give 3.4/5
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.