வணக்கம்.
"பாலைவன நிலா" குறுநாவல் கடந்த ஆகஸ்டு மாதம் 2023-ஆம் ஆண்டு, சுடர்க்கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.
உயிரை, இரத்தத்தை உறிஞ்சு உயிர்வாழும் ஒட்டுண்ணிகளைப் பற்றி நிறைய கேள்வி பட்டிருப்போம். இங்கு சில உறவுகள் ஒட்டுண்ணிகளாய் மாறி சிட்டுக்குருவி ஒன்றின் மீது பயணம் செய்து சுகம் காண்கிறது.
சிட்டுக்குருவி எவ்வாறு தன்னை மீட்டுக் கொண்டது? அதன் வாழ்வில் எவ்வாறு வசந்தம் வந்தது என்பது பாலைவன நிலாவோடு பயணம் செய்து அறிந்து கொள்ளுங்கள்.
உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன . நன்றி!!!
எனது மின்னஞ்சல் முகவரி : sugamathistories [at] gmail [dot] com
பேரன்புடன்,
சுகமதி