Jump to ratings and reviews
Rate this book

டார்த்தீனியம்

Rate this book
கணவன், மனைவி, மகன், மாடு, கன்று, நாய்... இதற்கு நடுவில் டார்த்தீனியம் செய்தது என்ன? கேளுங்கள்!

1 pages, Audiobook

First published January 1, 1992

14 people want to read

About the author

Jeyamohan

210 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (37%)
4 stars
8 (33%)
3 stars
3 (12%)
2 stars
3 (12%)
1 star
1 (4%)
Displaying 1 - 3 of 3 reviews
18 reviews
Read
October 11, 2023
ஆரம்பித்தது முதலே எதிர்மறையாகவே சென்றுக்கொண்டிருக்க, ஏன் இது எழுதப்பட்டது? இதனை தத்துவார்த்தமாய் அணுகவேண்டுமா? என்று தோன்றியது. பின், அணுக வேண்டுமா? என்று திசை திரும்பிட முயலும்,

-ரம்யா மனோகரன்
Profile Image for L XAVIER.
11 reviews4 followers
February 1, 2024
என்னளவில் இந்த நாவல் Dark, Tragedy, and Suspensful genre - வை சேர்ந்தது. டார்த்தீனியம் என்கிற அந்த கற்பனை செடி அல்லது மரம் மனித மனத்தின் ஆழ்ந்த இருளின் குறியீடாக உள்ளது. அது பேராசையோ, குடிப்பழக்கமோ, ஏதோ ஒன்றின் மேல் இருக்கும் வீண் பிடிவாதமோ, காம இச்சையின்பால் வரும் தொடர்போ எதுவாகவும் இருக்கலாம். எப்படி அது சிறியதாக ஆரம்பித்து மிகப்பெரியதாக வளர்ந்து ஒரு குடும்பத்தையே அழிக்கிறது என்பதை இந்த கதை சொல்லிச் செல்கிறது. இது நாம் நமது அன்றாட வாழ்க்கையில் குடும்பங்களில் பார்க்கும் ஒன்றுதான்.
இக்கதையில் இந்த அழிவை ஆரம்பத்திலேயே தாயும் மகனும் உணர்ந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தந்தையின் பால்ய காதலியின் கருமையை டார்த்தீனியம் அவருக்கு நினைவுறுத்துவதாகவும் இதில் சொல்லப்படுகிறது. இந்த செடியின் குணங்களாக அதன் கருமை, அதில் உறையும் அழகு, அதன் வளர்ச்சி வேகம், அதன் விஷம், கருநாகத்தின் உறைவிடம் என்று பலவும் சொல்லப்படுகின்றன. இதில் வரும் தந்தை அன்பு மிக்கவராகவும் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துபவராகவும் இருந்தாலும் இந்த செடியின் மேல் அவருக்கு இருக்கும் அலாதியான ஈர்ப்பு இந்த அன்பை விடவும் மேலோங்கி இருக்கிறது. இந்த முரணையே இக்கதை சித்தரிக்கிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. ஒரு மாபெரும் புதைக்குழி போல அது அனைத்தையும் விழுங்கி விடுகின்றது. இதிலிருந்து தப்ப வேண்டுமென்று மகன் வெளியூர் சென்று விடுகிறான். படிப்பவரின் மனதில் ஒரு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மறுபுறம் இதை நோக்குகையில், எழுத்தாளர் ஜெயமோகனின் வாழ்வில் நடந்த ஒரு பெரும் சோகத்தை அவர் இந்த கதையில் வேறு விதமாக எழுதி இருக்கிறார். அவர் பின்னாளில் எழுதிய 'அப்பாவின் தாஜ்மஹால்' என்ற கட்டுரையை இக்கதையோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். அவர் தந்தைக்கு அவருடைய சொந்த ஊரில் ஒரு பெரிய தறவாடு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை. எவர் சொல்வதையும் கேட்காமல் அவர் எடுத்த ஒவ்வொரு முடிவுகளாலும் அவர் சேர்த்த செல்வத்தையும் நிம்மதியையும் இழந்து பின்னர் அவர் தன் மனைவியையும் இழக்கிறார். அவரும் தற்கொலை செய்து கொள்கிறார். அந்த வீட்டை திறந்து கூட பார்க்காமல் விற்றோம் என்று ஜெயமோகன் சொல்வதிலிருந்து அந்த துயரத்தின் உக்கிரத்தை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த பெரும் துயரை நேரடியாக எழுத முடியாது எனவே வேறு விதமாக எழுதுகிறேன் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
இதை படிக்கும் ஒவ்வொருவரும் இத்தகைய ஒன்றை வாழ்வில் எதிர்கொள்ளும் போது அதை உணர்வோமா என்பதுதான் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.