என்னுரை ---------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குமுதம், குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
மேகங்கள் போல் சேர்ந்தும் கலைந்தும் செல்லும் இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கைக் காட்சிகளாக இந்தக் கவிதைகள் இருப்பதால் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு 'கலையும் மேகங்கள் ' என்று தலைப்பிட்டுள்ளேன். இவற்றில் பெரும்பாலானவை கண்ணன் அவர்களின் கவிதை வனம் குழுவிலும் , அழகியசிங்கரின் சொல் புதிது குழுவிலும் வெளிவந்தவை . அவர்கட்கு நன்றிகள் .