என்னுரை- நாகேந்திர பாரதியின் சிறுகதைகள் ---------------------------------------------------------------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை, சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, , குமுதம் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எனது கவிதைகள் பல தொகுப்புகளாக அமேசானில் கிண்டில் வெளியீடாக வந்துள்ளன.
இது எனது சிறுகதைத் தொகுப்பின் 11 ஆவது புத்தகம். பல்வேறு மனங்களின் நினைவுகளின் மணம் வீசும் கதைகளைத் தொகுத்துள்ளதால் இதற்கு ' மனங்களின் மணங்கள் ' என்று தலைப்பிட்டுள்ளேன். இது ' மனங்களின் மணங்கள் - நாகேந்திர பாரதியின் சிறுகதைகள் - தொகுப்பு 11 '