பிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல், கலை இலக்கியம், கல்வித்துறை, நண்பர்கள், உறவுகள், பிரிவுகள், தன் குடும்பம் ஊடாக அவர் கண்டவை, அனுபவித்தவை, உணர்ந்தவற்றை மிக வெளிப்படையாகத் தனக்குக் கைவரப் பெற்ற இனிய மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார். மனித இனம் காலம் தோறும் வடிவமைக்கும் விழுமியங்கள் மற்றும் மதிப்பீடுகளைத் தம் வாழ்க்கை நெறிகளாகக்கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களைச் சித்தரிக்கும் இக்கட்டுரைகள், மீறுபவர்களையும் கூடவே அணைத்துச் செல்கிறது. வெறுக்கத்தக்க மனிதர்களே உலகில் இல்லை என்பது அவருடைய கொள்கையாக இருக்கிறது.
Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.
He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.
நான் படிக்கும் பிரபஞ்சனின் முதல் நாவல். தன் அனுபவங்கள் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரை தொகுப்பு தான், "மயிலிறகு குட்டி போட்டது".
சென்னை வாழ்க்கை, தன் சொந்த ஊரான புதுச்சேரியின் வரலாற்று பதிவுகள், பிரெஞ்சு ஆதிக்கம், பாரதி, வ.வே.சு ஐயர், அரவிந்தர், வ.சுப்பையா என்று பல சூப்பர் ஹீரோக்கள் வலம் வருகிறார்கள்.
தன் தந்தை, குடும்பம், நண்பர்களுடனான உறவுகள், உடன்பிறப்புகளின் மரணம், தான் ஒட்டிய சைக்கிள், காதல்; இலக்கியம், இசை, புத்தகம் தன்னை மனிதனாக மாற்றியது - இவை எல்லாம் தேன் சொட்டலும், கண்ணீர் சொட்டலுமாக..
சங்கரலிங்கமும் & இந்தி எதிர்ப்பும், நைந்நியப்பிள்ளை தெருவின் கதை, வாஞ்சிநாதன் & ஆஷ் படுகொலையின் பின்னணி, இஸ்லாமும் & முகமது நபியும் என்று பல சரித்திர குறிப்புகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.