Jump to ratings and reviews
Rate this book

Prabhakaran Oru Vaazhkai

Rate this book
பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு அது. இன்று, தனியொரு அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் பிரபாகரன். காவல் துறை, நீதி மன்றம், தரைப்படை, கடற்படை, வான் படை என்று ஒரு தேசத்திடம் இருக்கவேண்டிய அனைத்தும் அவரிடம் உள்ளன.

பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மதிப்பீடு செய்வதற்கு முன்னால் இலங்கை இனப் பிரச்னையின் முழு வரலாறையும் புரிந்துகொள்வது அவசியம். சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இடைவிடாமல் நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்தின் ஆணி வேர் எது? யார் தொடங்கினார்கள்? ஏன்? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தத் தீ எரிந்துகொண்டிருக்கப்போகிறது? ராணுவ ரீதியாக மட்டும்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமா? யுத்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம்? தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வா? பிரபாகரனால் தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தர முடியுமா?

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்திருக்கிறது. தேடப்படும் முதன்மை குற்றவாளி, பிரபாகரன். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளன. யுத்தம் இப்போதைக்கு முடிவதாக இல்லை. இந்தச் சூழலில் விடுதலைப் புலிகளின் எதிர்காலம் என்ன? பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை

264 pages, Paperback

First published January 1, 2009

3 people are currently reading
45 people want to read

About the author

Chellamuthu Kuppusamy

17 books29 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (37%)
4 stars
14 (37%)
3 stars
9 (24%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
66 reviews1 follower
April 23, 2023
பல மாதங்களுக்கு முன்பே மிகவும் ஆசைப்பட்டு வாங்கிய பொத்தகம் தான் இது! ஆனால், இதனை வாசிக்க நேரம் இப்போது தான் அமைந்தது. தலைவர் பிரபாகரன் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் தான் என்னை அது சம்பந்தப்பட்ட பொத்தகங்களை தேடச் செய்ததது. அப்படி தேடிய போது தான் இந்த பொத்தகம் சரியாக இருக்கும் என்று எனக்கு இந்த பொத்தகத்தை அன்பு அண்ணன் @cheranchenguttuvan_666 அறிமுகம் செய்து வைத்தார்.

எந்த ஒரு சார்ப்புத்தன்மையும் இல்லாமல் வரலாற்றை சொல்லும் பொத்தகமாகவே ஆசிரியர் நடுநிலைமையாக எழுதியுள்ளார். தலைவர் பிரபாகரனின் பிறப்பு, அதற்கு முந்தைய இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள், யார் இலங்கையின் பூர்வக்குடிகள் என்ற வரலாற்று தகவல்களுடன் இந்த பொத்தகம் தொடங்குகிறது. ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநியாயங்கள் என்ன, எதனால் ஆயுதம் ஏந்திய போராளியாக மாற வேண்டும் என்று தலைவர் அவர்கள் முடிவெடுக்கிறார் என்பதையெல்லாம் உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள்.

தலைவர் அவர்கள் ஏற்கனவே இருந்த பல இயக்கங்களுள் ஒன்றில் சேராமல், ஏன் தனியாக ஒரு இயக்கத்தை உருவாக்கினார், அந்த இயக்கத்திற்கு முதலில் இட்ட பெயர் என்ன என்பதையெல்லாம் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

இலங்கை அரசின் அராஜகம், நிலைப்பாடு, தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், சூழ்ச்சிகள் என வேதனையை கடத்துகிறது இந்த பொத்தகம். நாலு ஈழப் போர்களும் எங்கெங்கெ நடந்தன, எதனால் ஒவ்வொரு போரும் தொடங்கியது, இரு தரப்பினருக்கும் எத்தனை உயிரிழப்புகள், எந்தெந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படன என்பவை முதற்கொண்டு இந்த பொத்தகத்தில் தகவல்கள் உள்ளன. விடுதலைப் புலிகள்🐯 உருவாக்கப்பட்ட விதம், அதன் வளர்ச்சி, அதில் உள்ள கட்டுப்பாடுகள், இறுதி வரை 'தனி ஈழம்' என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறாத்தன்மை, உயிரை துச்சமென நினைத்த வீரர்கள் என இவற்றை வாசிக்கும் போதே புல்லரித்தன.

ஈழத்தமிழ் மக்களை துன்புறுத்திய செயல்கள், இலங்கை அரசின் அராஜகம், சில தமிழர்களின் துரோகங்கள், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் இருந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், விடுதலைப் புலிகள் மற்றும் தலைவருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என இறுதியில் மனதை கணக்க செய்தது இந்த பொத்தகம்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் எப்படி உலக அரசியலாக மாறியது, ஏன் தலைவரின் மரணம் இன்னும் மர்மமாக இருக்கிறது, எத்தனை முறை தலைவர் ஊடகங்களால் கொல்லப்பட்டார், ஈழத்தமிழர்களுக்கு எந்தெந்த வடிவில் துரோகங்கள் இழைக்கப்பட்டன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய பொத்தகம் இது.

அனைவருக்கும் இனிய உலக புத்தக நாள் வாழ்த்துகள்🎉🎊
Profile Image for Babu Manohar.
5 reviews
January 19, 2023
#personalreview

The one good book know who is velupillai prabhakaran and what is LTTE . The writer have collected my data from manyy persons and books and completed his book . The writer left some unfilled answer a which left the reader to get more involved. The writer was very conscious about the reader because like other the reader should not come with a solved answer with the unsolved mystery lies behind many incident.The writer made us to shred some tears in some pages . My conclusion about prabhakar is like , some people follow Gandhiji and some follow nethaji their paths may differ but the motto is on one fixed thing that is FREEDOM.
Profile Image for Rohith.
31 reviews4 followers
February 10, 2022
Unlike other books this doesn't deal with the Eelam and LTTE emotionally. Without Prabakaran the history of the tamil eelam couldn't have came to light.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.