தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளரான ஆர். சிவகுமாரின் 29 கதைகளைக்கொண்ட 'இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்' என்கிற தொகுப்பிலிருந்து 15 கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் சிறப்பையும் நுட்பங்களையும் பேசுகிற நூல்.
சிவகுமாரின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச்சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணரமுடிகிறது. ஒவ்வொரு கதையை மொழிபெயர்க்கவும் அக்கதை கேட்கும் உழைப்பை அளித்திருக்கிறார். - சுந்தர ராமசாமி
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.