என்னுரை ---------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குமுதம், குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
வாழ்வின் நிகழ்வுகளால் நிறம் தேடி அலையும் முகங்களாகத் திரியும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் என்பதால் இதற்கு ' நிறம் தேடும் முகங்கள் ' என்று தலைப்பிட்டுள்ளேன். இவற்றில் பெரும்பாலானவை நண்பர் கண்ணன் அவர்களின் 'கவிதை வனம் 'குழுவிலும், நண்பர் அழகியசிங்கர் அவர்களின் 'நவீன விருட்சம்' குழுவிலும் வெளிவந்தவை. அவர்கட்கு நன்றிகள்.