வணக்கம் டியர்ஸ், மீண்டும் மற்றொரு கதையின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணத்தில் மணமக்களான நிரல்யா மற்றும் அஸ்வின் இருவரும் ஓரே நேரத்தில் காணாமல் போக, அவர்களை தேடும் கால அவகாசத்திற்காக, மணப்பெண்ணின் தங்கை நித்திலாவுக்கும், மணமகனின் தம்பி ஜீவனுக்கும் நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதன்படியே நிச்சயம் நடக்க, மோதிரம் மாற்றி பிறகு மாலையும் போட சொல்ல, அதில் யாருக்குமே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலி, ஜீவனின் கைகளால் நிதிலாவுக்கு போடப்பட்டது.
இது, மாலையில் தாலியை மறைத்து வைத்து, தனது காதலிக்கு போட நினைத்த ஜீவனின் நண்பனை தவிர. அதுவும் தாலி போல இல்லாமல் லாக்கெட் போன