"ஆனந்த போர்க்களம்" குறுநாவல் கடந்த மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டு, சுடர்க்கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.
திருமணத்தை ஆவலாய் எதிர்நோக்கும் நம் கதையின் நாயகி சந்தியாவிற்கு, அவள் வெறுக்கும் ஒரு ஆண்மகனை மணமகனாக தேர்ந்தெடுக்கிறார் அவளின் தந்தை.
கதையின் நாயகன் வீரேந்திரனும் திருமணம் என்பது தனக்கு துளியும் ஒத்துவராத ஒன்று என்று எண்ணி திரிபவன்.
வீராவின் கோபத்தை வெறுக்கும் சந்தியாவும், திருமண பந்தத்தை, அதன் கட்டுப்பாட்டை வெறுக்கும் வீராவுக்குமான வாழ்க்கை பயணம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை இந்த கதையின் பயணத்தில் தெரிந்து கொள்வோம்.