Jump to ratings and reviews
Rate this book

ஆதனின் பொம்மை

Rate this book

96 pages, Paperback

First published February 1, 2021

Loading...
Loading...

About the author

கா. உதயசங்கர், (உதயசங்கர் கார்மேகம்) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார். இவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரசுக்கர் விருது ஆதனின் பொம்மை என்ற குழந்தை இலக்கிய நூலிற்காக வழங்கப்பட்டது.

விருதுகள்
லில்லி தேவசிகாமணி நினைவு சிறுகதை நூல் விருது - 1993
தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது - 2008
உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது – 2015
எஸ். ஆர். வி. பள்ளியின் படைப்பூக்க விருது - 2016
கலை இலக்கியப் பெருமன்றம் – சிறுவர் இலக்கிய விருது – 2016
விகடன் விருது – சிறுவர் இலக்கிய விருது - 2016
கு.சி.பா. நினைவு - சிறுவர் இலக்கிய விருது – 2017
நல்லி - திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது - 2017
தமிழ் பேராயத்தின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - 2017
கவிதை உறவு சிறுவர் இலக்கிய விருது - 2018
அறம் தமுஎகச படைப்பாளர் விருது - 2019
பால சாகித்திய புரசுக்கர் விருது - 2023

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
4 (66%)
3 stars
2 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Elankumaran.
151 reviews25 followers
April 18, 2024
ஆதனின் பொம்மை ❤️

தமிழர் வரலாற்றின் தொடக்கத்திற்கான தேடலிலும் நாகரீகத் தோற்றத்திற்கான ஆய்விலும் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய கீழடி அகழாய்வின் கண்டுபிடுப்புக்களை அடிப்படையாக் கொண்டு தமிழர் வாழ்வியலையும், அதன் இனிமையான சிறப்பம்சங்களையும் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் சிறுவர்களுக்கும் எளிதாக கொண்டுசேர்க்கும் தன்பணியை சிறப்பாக வென்றிருக்கிறார் எழுத்தாளர். இப்படியான புத்தகங்கள் நிச்சயம் வரவேற்கத்தக்கவை. நம் வரலாற்றை பெரியவர் முதல் சிறார் வரை அனைவரிடமும் கொண்டுசேர்க்க வேண்டியது காலத்தின் அவசியம்.

வரலாறு முக்கியம் அமைச்சரே..!
Profile Image for Gayathri (books_and_lits).
120 reviews3 followers
March 22, 2026
வரலாற்றுப் புனைவு,அறிவியல் புதினத்தில் வருவது போல time travel,கூடு விட்டு கூடு பாய்தல்,”தமிழ் சமூகத்தின் ஆதி எது?” என்ற மிகப் பெரிய தேடலின் தொடக்கத்தை இளம் நெஞ்சங்களில் கிளப்பி விடும் ஒரு படைப்பு,2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் “பால புரஸ்கார் விருது”பெற்ற நூல்!இப்படி பல்வேறு அம்சங்கள் கொண்ட ஒரு இளையோர் நாவல்.மேற்சொன்ன எந்த சிறப்பம்சமும் மறுப்பதற்கில்லை என்றாலும் ஏதோ ஒரு சிறு நெருடல்.ஏதோ ஒரு கோர்வைத்தன்மை இல்லாதது போன்ற உணர்வு.சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிட்டாலும்,வாசிக்கும் இளம் நெஞ்சங்கள் நிச்சயம் அடுத்தகட்ட ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தேவையான தூண்டுதலை தருவதாகவே தோன்றினாலும் ஏதோ ஒரு முழுமை உணர்வை தராதது போன்றதொரு வாசிப்பனுபவம்!

Read more…

https://www.facebook.com/share/p/1AzF...
Displaying 1 - 2 of 2 reviews