Jump to ratings and reviews
Rate this book

Chinna Arayathi

Rate this book

278 pages, Paperback

Published December 1, 2010

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for இரா  ஏழுமலை .
154 reviews8 followers
June 17, 2026
அரசர்கள் காலத்தில்,அரசர் பாதுகாப்பு படையில் காவல் பணி செய்த அரயன்கள், அரசர் போரில் தோற்றதால் அரயன்கள் தப்பி காடு மலையில் பதுங்கி வாழ்கின்றனர் பிறகு காலப்போக்கில் மலை அரயன்கள் என்றும் பழங்குடிகள் என்றும் பெயர் பெறுகிறனர். பழங்குடிகள் வாழ்க்கை முறை நாம் அறிந்ததே காடுகளில் இயற்கை உணவை உண்டு வேட்டையாடி சிறிது விவசாயம் செய்து அமைதியாக வாழ்க்கை வாழ்கின்றனர். நவீன வாழ்க்கை அவர்களை சென்றடையும் போது இயல்பான அவர்கள் வாழ்கை பற்றகுறையும் வறுமையானதாக மாறுகிறது. கூடவே நாடு விடுதலை அடைந்து புதிய அரசாங்கம் காவல்துறை ஏற்படும் போது அதிகாரம் குழங்குடி மக்கள் மீது பாய்ந்து இந்தியாவெங்கும் நிகழ்ந்தது. பழங்குடிகளின் விவசாய நிலங்கள் பறிக்கபடுதல், பெண்கள் மீதான வன்முறை, பழங்குடிகள் உடமைகள் சொத்துக்கள் சூரையாடப்படுதல் அறங்கேறியது. அதிகாரத்தின் முன் கையறு நிலையில் நின்று தனது சொத்துக்கள் குடும்பம் சூரையாடப்படுவதை பார்ப்பது என்பது மிகவும் வேதனையான ஒன்று.இதற்கு அரயன்கள் விதிவிலக்கல்ல அல்ல அவர்களுக்கும் இது நிகழ்கிறது. சுதந்திரத்திற்கு பின் பல வருடங்கள் கடந்து நிலமை ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் சற்று மேம்படுகிறது. மெல்ல கல்வி வேலைவாய்ப்பு கிடைக்க தொடங்குகிறது. ஆனால் நாவலின் இறுதி எனக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. முதல் முறையாக கல்வி கிடைத்த ஒரு பழங்குடி சமுகம் எதை நோக்கி சொல்கிறது என்பது தான் கேள்வி ? ... கல்வி கிடைத்து வெளி உலக அனுபவம் வந்த பிறகு காதலில் நாட்ட சென்ற பார்வதி பத்மநாதன் உடன் ஓடி போகிறார்கள். இதை முற்போக்கு என்ற கோணத்தில் அணுகினாலும் முற்போக்கு சிந்தனை பற்றி நாவலில் வருவது மிக குறைவே. நவீன மனிதற்கள் எந்த பழங்குடிகளையும் அவர்கள் தனி தன்மையோடு வாழ விட்டதில்லை துப்பாக்கியோடு சென்று ஆதிவாசிகளை கொன்று குவித்த வரலாறு உண்டு.

கொச்சுராமன் மயக்க ஊசி இல்லாமல் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து தப்பி செல்லும் காட்சியோடு நாவல் முடிகிறது . கொச்சுராமன் மனைவி குஞ்ஞிபொண்ணு உடன் தெரிந்தே மரணத்தை நோக்கி மெல்ல காலடியை எடுத்து வைத்து செல்கிறான்.
நவீனமும் பழமையும் ஒன்றை ஒன்று உரசி விலகி செல்லும் இரண்டு வழிகள்.
Displaying 1 of 1 review