கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
சங்க இலக்கியங்களிலிருந்து காலத்தால் அழியாத இலக்கியச் சுவை மிகுந்த பாடல்களின் பொருளை எளிய உரைநடையில் விளக்குகின்றார் கி.வா.ஜகந்நாதன் ஐயா அவர்கள்.இலக்கிய ஆர்வலர்களுக்கு இந்நூல் ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.