சர்க்கரை நோயிலிருந்து முற்றிலும் விடுதலை ஆகும் வழிகளைச் சொல்லும் முதல் தமிழ் நூல். சர்க்கரையைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும், குணப்படுத்த முடியாது என்ற பொய்யைச் சான்றுகளுடன் உடைக்கிறது இந்தப் புத்தகம். அலோபதி மருந்துகளின் கொடூர விளைவுகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டிய அவசியத்தையும், மரபு வழிகளில் இந்த நோயில் இருந்து விடுதலை ஆகும் முறைகளையும் விளக்கும் நூல் இது.
Please verify if you are able to preview the book to make sure you are able to read them in your Kindle before purchasing it
இனிப்பு ❤️ • ஆசான் செந்தமிழன் சர்க்கரை நோய் தொடர்பாக அவர் உணர்ந்தவற்றை அனைவரும் அறியும் நோக்கில் பதிப்பாக்கியது தான் இந்த இனிப்பு - சர்க்கரை நோயிலிருந்து விடுதலை. • முதலில் சர்க்கரை என்பது ஒரு நோயே அல்ல அது உடலில் உள்ள வேறு நோயின் காரணத்தாலோ உடல்நிலை மாற்றம் காரணமாகவோ ஏற்படும் நிலை மாற்றம் ஒன்றே. அதனால் சர்க்கரைக்கு என தனியாக தீர்வேதும் இல்லை. அதன் மூல காரணத்தை இனங்கண்டு அதை மாற்றுவதே சர்க்கரையை குணப்படுத்த ஒரே வழி என்று கூறும் ஆசான் அதே சர்க்கரை நோயை வைத்து அலோபதி மருத்துவமுறையில் நடக்கும் முறைகேடுகள், வணிக நோக்கான செயற்பாடுகள் என நோயை குணப்படுத்துவதை விட்டுவிட்டு மருந்துகளை விற்பனை செய்வதையே தொடர்கிறது என கடுமையாக சாடுகிறார். உண்மையும் கூட. • நமது உடல் பற்றிய அறிவும், இயற்கை பற்றிய உணர்வும், மரபுவழியிலான வாழ்க்கைமுறையுமே நோயற்ற வாழ்விற்கு உகந்த வழி. அறிவை விட மனமே சிறந்த சக்தி. உணவு தான் சிறந்த மருந்து. “திருவள்ளுவர் மருந்து என ஓர் அதிகாரத்திற்குத் தலைப்பு வைத்துவிட்டு, அந்த அதிகாரம் முழுக்க மருந்தே தேவையில்லை என்பதைத்தான் வலியுறுத்துகிறார்.” மருந்தற்ற வாழ்வே மகத்தான வாழ்வு. • “உண்மையின் ஒளி மட்டுமே இருளில் வழிகாட்டும். உண்மையே ஒளி. உண்மையே கடவுள். உண்மையை அறியாமல், உணராமல் எந்தத் தீர்வையும் அடைய முடியாது.”