பிறப்புறுப்பு இருக்கும் கடவுள் என் கவிதையை வாசிக்க நேர்ந்தால் அவருக்கு உடனடியாகக் கெட்ட வார்த்தைகளோடு அதைப் புணரத் தோன்ற வேண்டும். பின் அதிலிருந்து ஒரு உலகம் பிறக்கும் திரைகளற்று, வெறுப்பற்று, பொறுப்பற்றுத் தன்னைக் கடவுள் நீக்கிக்கொள்ளாத ஒரு இடம். ஆனால் கடவுளுக்குப் பிறப்புறுப்பு உண்டா இல்லையா எனத் தெரிந்துகொள்ள முடிவதே இல்லை. என் கவிதைக்கு இழைக்கப்பட்டிருக்கும் ரகசிய அநியாயங்கள் இதிலிருந்து தொடங்குகின்றன.
கவிஞர். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சமயம், பெண்ணியம், பண்பாட்டியல் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு செய்துவருகிறார். Journal of Asian Studies, Anthropological Quarterly போன்ற இதழ்களிலும் கல்வித்துறை சார்ந்த ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல்களிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலச்சுவடு, காலக்குறி ஆகிய தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வாசிப்பும் எழுத்தும் என்று நம்பும் பெருந்தேவி, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபாடுகொண்டவர்.