இத்தனை கூட்டத்தில் நம்மைத் தெரியப் போகிறதா என்று ஆசுவாசம் எழ, அவளுடைய பதற்றம் சற்று விலகியது.
ஆடைகளைப் பார்க்கும் ஆர்வத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் நகர்ந்திருக்க, “இங்க சர்க்கரை எல்லாம் விக்கிறது இல்லை” என்ற அழுத்தமான கம்பீரக்குரல் பூரணியைச் செயலிழக்க வைத்து சிலைப்போல் மாற்றியது.
இத்தனை நேரம் விலகியிருந்த பதற்றம் பல மடங்கு வேகமாய் திரும்பி வந்திருக்க, விரலின் நுனியைக் கூட அவளால் அசைக்க முடியாது போயிற்று!
"அதோட சர்க்கரை விலையும் ஐம்பது ரூபாய் இல்லை போலவே! நாற்பதுன்னு கேள்விப்பட்டேன்!" என்று மீண்டும் சீண்டல் குரலில் அவளின் பின்புறமிருந்து நீதிவாசன் வினவினான்.
தன் குரலைக் கேட்டும் திரும்பாமல் நின்றிருந்தவளை ஆராய்ச்சியாய் பார்த்த