இந்நூலில் ஐந்து நாட்கள் தீபாவளி கொண்டாடும் சம்பிரதாயம் குறித்த தகவல்களும், அந்நாட்களில் பாடத் தகுந்த பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
என்றென்றும் நிலைக்கின்ற, எங்கெங்கும் நிறைகின்ற ஒளியே தெய்வம். அதன் கருணையொளியில் களித்து, தித்திக்கும் அன்பையே அனைவருக்கும் அளித்து, ஆனந்தப் பட்டாசுகளை ஒளிரவும் அதிரவும் விட்டு, அன்றாடம் தீபாவளி கொண்டாட நம் எல்லோருக்கும் இறைவன் பேரருள் கிட்டட்டும் என்பதே இந்நூல் மூலம் அடியேனுடைய பிரார்த்தனை. ஒளியுடன் ஒளிர்வோம்!