தாயின் வாழ்க்கையை மாற்ற டைம் ட்ராவல் செய்து கடந்தகாலத்திற்கு தோழியுடன் செல்லும் கதாநாயகி அங்கே படும் பாட்டையும் என் பாணியில் காமெடி கலந்த காதலுடன் உருவானதே இந்த "அழகான கனவே அழியாத நினைவே" ஆகும்.
கதையிலிருந்து ஒரு குட்டி டீசர்
“ஹலோ எச்சூசுமீ, உள்ளே வரலாமா?” என்று கலைந்த முடியையும், சட்டையையும் சரிசெய்து, முன் நெற்றி முடியை ஊதி, நண்பனின் தோளில் ஒரு கையைப் போட்டபடி, ஸ்டைலாக நின்று கேட்ட ஷியாமின் தோரணையில்,
“வந்துட்டியா எருமை? ஒரு நாள் கூடச் சரியான நேரத்துக்கு கிளாஸுக்கு வரவே மாட்டீயா?” “இப்பவாவது வந்தேனேன்னு சந்தோஷப்படுங்க சார்” என்றவனின் பதிலில், பேராசிரியருக்குத் தலையில் அடித்துக்கொள்ளாத நிலை.