இரண்டு காரணங்களால் இப்புத்தகம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது. 60க்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் தோற்றக் கதைகளைச் சேகரித்துத் தொகுத்துள்ள ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் முன்வைத்துச் சமகாலத்துப் பெண்களின் நிலையோடு இணைத்து ஒரு விவாவதத்தைத் தூண்டுகிறார்.
மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் மதங்களின் வரலாற்றை மக்களுக்குப் போதிக்க வேண்டும் என்கிற மார்க்சிய வழியில் நின்று இத்தெய்வக் கதைகளைக் கற்றுக்கொள்வதும் மக்களிடம் பரவலாக்கி உரையாடல்களைத் தூண்டுவதும் நமது கடமை.