Jump to ratings and reviews
Rate this book

செந்நிலம்

Rate this book
காலங்காலமாக கட்டமைக்கப்பட்ட கள்ளத்தனத்தின் மீது கல்லெறியும் சிறு எத்தனிப்பு! உங்கள் மண்டையை அது உடைக்குமானால் அதற்கு நான் பொறுப்பல்ல!

199 pages, Paperback

Published January 1, 2025

2 people are currently reading
5 people want to read

About the author

ஜெயராணி

4 books2 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (75%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
1 (25%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
9 reviews
July 28, 2025
I was truly moved by the stories. Each one is uniquely narrated, showcasing your remarkable storytelling ability and emotional depth. The way you convey emotions is powerful and heartfelt. Among all, நெடும்புகழ் மாதேவி, செந்நிலம், and especially நதிமுலம் left a deep impression on me — I couldn't hold back my tears while reading நதிமுலம்.
Profile Image for Ashley.
23 reviews
October 6, 2025
என் மதிப்புரையை இந்த தொகுப்பின் கடைசி கதையில் இருந்து ஆரம்பிக்க போகிறேன். "செவ்வரளி பூச்சரம்". Seeing red என்ற குறும்படம் கண்டிப்பாக இந்த கதையை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது. அது பெருமளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஆனால் உண்மையில் இந்த கதையை படிக்கும் போது இருந்த உற்சாகம் அந்த குறும்படத்தை பார்க்கும் போது எனக்கு இல்லை. அத்தனை பாராட்டும் ஜெயராணி அவர்களையே சேரும். இப்படி ஒரு பகிரங்கமான திருட்டு நடந்துள்ளது, அதை நினைத்து நான் மனம் வருந்துகிறேன்.

மனிதத்தன்மையை விட அற்ப மனிதர்கள் உருவாக்கிய சாதி தான் உயர்ந்தது என்று நினைக்கும் நபர்களுக்கு இடையே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அத்தகைய இந்த சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெவ்வேறு கண்ணோட்டத்தில் இருந்து காட்சிப்படுத்தியுள்ளார். இந்த கொடூர சமூகத்தில் பெண்களின் நிலை இன்னும் மோசமாக தான் உள்ளது. அதையும் மீறி பல பெண்கள் இங்கு வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறோம். இவை தான் இக்கதை தொகுப்பின் கருவாக உள்ளது. அத்தகைய எழுச்சி பெண்கள் தான் இந்த கதைகளில் காண படுகின்றனர்.

ஜெயராணி அவர்களின் எழுத்து, உணர்ச்சிகளை துல்லியமாக கடத்தும் வல்லமை கொண்டுள்ளது. எதார்த்தமான உரையாடல்களால் அந்த கதை மற்றும் கதை மாந்தர்களுடன் எளிதில் ஒற்றுபோக முடிந்தது. அவர்களின் அழகான வர்ணனை என்னை அந்த இடத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. இதை படிக்க ஆரம்பித்தவுடன் மிக சுவாரசியமாக ஒரு கதைப்பின் இன்னொரு கதை படிக்க ஆர்வம் தூண்டியது. ஆனால் சில கதைகள் என்னை மிகவும் பாதித்தது. அவை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீள எனக்கு குறைந்த பட்சம் ஒரு நாள் ஆனது. அந்த கதைகள் "அம்மாவின் பிரசவம்" (என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழ வைத்தது),"ஆறாமவன்","நதி மூலம்", "மூகம்மா காடு".

ஜெயராணி அவர்களின் மற்ற படைப்புகளை படிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். இப்படி பட்ட ஒரு அற்புதமா எழுத்தாளருடன் சம காலத்தில் வாழ்வது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.