காதலை முன்வைத்த குறுநாவல்கள் இவை. ஒன்று ஆணின் காதலைப் பற்றியது. மற்றது பெண்ணின் காதலைப் பற்றியது. எளிய வடிவம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் பயின்று வரும் அசலான உளப் போராட்டங்கள் இவற்றை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன. குறிப்பாகப் பாத்திரங்களை அதனதன் நியாயங்களைப் பேச வைத்திருப்பது ஒருவித பன்முகத்தன்மையை வழங்குகிறது. எத்தனை பேசினாலும் காதல் பற்றிய விஷயங்கள் மட்டும் நீர்த்துப் போவதோ தீர்ந்து போவதோ இல்லை. காதலை வியந்துகொண்டோ வெறுத்துக்கொண்டோதான் வாழ முடியும் - இரண்டுக்கும் மத்தியில் கடக்க முடியாது. அதையே இக்கதைகள் அடிக்கோடிடுகின்றன.