இது பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் வெளி வந்த ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம் - இன்னொரு முகம். நிகழ்காலத்தில் ஆய்வு நிலையில் இருக்கும் பெருந்தரவு தகவல் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அறிவியல் அபூதப் புனைவு. குற்ற இனச் சட்டத்தின் ஒரு நூற்றாண்டு வரலாற்று கதை இந்த நாவலின் மனசாட்சியாக இடம் பெறுகிறது. இது வெவ்வேறு காலங்களில் இருந்து சாமானியச் சொல் எடுத்து சமகால பேரரசுகளோடு ஓர் உரையாடல். கபிலன் வைரமுத்து