தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பாதையாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ‘பண்பாட்டுப் பேரறிஞர்’ பேராசிரியர் தொ.பரமசிவன், சமயங்களில் புதைந்து கிடக்கும் அரசியலை, தன் புதிய ஆய்வு முறையின் மூலம் தோண்டி எடுத்து, இந்த நூலின் மூலமாக உலகின் பார்வைக்குப் படைத்திருக்கிறார். உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ‘பிறவாப் பெருநிலை’யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார். இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று உணர்த்துகிறார்! இந்தியத் தத்துவம், இந்தியச் சமயங்கள் ஆகியவற்றின் வரலாறு என்பது, ஒடுக்குகின்ற சாதிக்கும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதே இந்த நூலின் கருத்து நிலை. இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்கவில்லை... கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாகத் தெரியாது... கடலாகத் தெரியும்!
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
அரசியல் என்பது எங்கிருந்து தொடங்கப்பட்டது என்கிற கேள்விக்கு சமயங்களில் இருந்து தான் அரசியலும் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளும் நிகழ்ந்திருக்கின்றது என்பதை மனிதகுல வரலாற்றை ஊன்றி வாசித்தால் தெரிந்து கொள்ளமுடியும்... தமிழகத்தில் நிகழ்ந்த அரசுடைமையாக்கத்தையும், பெரும்பான்மையான மக்கள் திரளை ஒரு திசை நோக்கி நகர வைப்பதற்கான வேலையை சமயங்கள் எவ்வாறு மேற்கொண்டன என்பதை இந்த நூல் விரிவாக பேசுகிறது.
இரண்டு பகுதிகளை கொண்ட இந்த நூல் முதல் பகுதியில் கட்டுரை வடிவிலும், இரண்டாவது பகுதி தொ.ப அவர்களுக்கும், சுந்தர் காளி அவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவாக இருக்கிறது.
தமிழகத்தில் சமண, பௌத்த மதங்களின் வருகை எவ்வாறு இருந்தது அதை எதிர்த்து வளர்ந்த பக்தி இயக்கம் தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக் கொண்டது என்பதை விரிவாக விளக்குகிறார்... ஆரம்பத்தில் சமணமும் பௌத்தமும் அதிகம் வளர்ந்திருந்தாலும் அதில் இருந்த ஆணாதிக்கத் தன்மையும் நிர்வாண துறவிகளின் விலக்கலும் தமிழ் மக்களிடம் இருந்து அந்த மதங்கள் விலகிப் போக காரணமாக குறிப்பிடுகிறார்...
சமணத் துறவிகள் மக்கள் வாழிடங்களை விட்டுத் தள்ளி வாழ்ந்ததற்கு அவர்களது நிர்வாணத் துறவு ஒரு காரணம் பௌத்த துறவிகளின் சங்க விதி அவர்கள் மக்கள் வாழ்விடங்களில் கலந்து வாழத் தடையாக இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.
இன்றளவும் தாய்த் தெய்வ வழிபாடே பெருவாரியாக அமைந்திருக்கும் தமிழ்ச் சமுதாயத்தில், ஆண் துறவியர் பெற்றிருந்த மரியாதை அந்தக் காலத்தில் பெண்களின் மனதில் எதிர்வினை ஆற்றத் தொடங்கியது. திகம்பர துறவியர் பிச்சைக்கு வரும்போது பெண்கள் ஓடிச்சென்று கதவினை அடைத்துக் கொண்டனர் என்பது அப்பர் தரும் சமூக வரலாற்றுக் குறிப்பாகும்.
அதே போல துறவு நெறி மரியாதைக்குரியதாக இருந்தாலும் வாழ்நெறியாக இருக்க முடியாது. அதை வாழ்நெறியாக ஏற்கத் தமிழன் தயாராகயில்லை. கள் உண்ணாமையைத் தமிழர்கள் ஏற்க்கவில்லை. அதாவது, அக்காலத்தில் 'கள்' உணவின் பகுதியாகக் கருதப்பட்டது. சமணர்கள் ஒழுக்கத்தின்பாற்ப்பட்டதாகக் கூறும் போது எளிய மனிதனின் மனம் ஏற்க மறுக்கிறது. இன்றைக்கும் நம் நாட்டார் தெய்வங்களெல்லாம் கள்ளும், சாராயமும் குடித்துக் கொண்டு தான் இருக்கின்றன. காந்தியக் கொள்கைப்படி அவற்றை ஒழுக்கங்கெட்ட தெய்வங்கள் எனக் கூறலாமா? நம்முடைய சுடலைமாடன்சாமி 'கள்' குடிக்கிறார் ; அப்படியென்றால், அவர் ஒழுக்கங்கெட்ட சாமியா என்று ஒரு மாணவரிடம் கேட்டுப் பாருங்கள் அவன் அதிர்ந்து போவான். எனவே 'கள்' உணவின் பகுதி. புலாலும் உணவின் பகுதி. இது ஒழுக்கம் சார்ந்தது என்ற கோட்பாட்டை தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்...
இந்த காலகட்டத்தில் தான் பக்தி இயக்கம் மிக வீரியமாக தன்னுடைய பணியை செய்ய ஆயத்தமாகியது... அதற்கான பணியை ஒவ்வொரு அரசுருவாக்கத்தின் மூலமாக சைவ மதம் சாதித்துக் கொண்டது... பார்ப்பனீயம் கோயிலுக்குள் ஆரம்பத்தில் நுழைவதில் தயக்கம் காட்டினாலும் பிற்காலங்களில் நிறைய வேத பார்ப்பனர்கள் கோயில் வழிபாட்டில் நுழைந்துவிட்டனர்...
இந்த மாற்றங்கள் சோழர் ஆட்சிக்காலத்தில் நடைபெறுகிறது... சோழர்கள் ஆட்சிகாலத்தில் தான் வேளாண் குடியினர் மீது அதிகமான வரிச் சுமை சுமத்தப்படுகிறது... பெரும்பான்மையான விளைநிலங்கள் கோயில்களின் கட்டுப்பாட்டிலும், பல இடங்கள் பிராமணர்களுக்காக தானமாகவும் விழங்கப்படுகிறது... கிரமம் படித்த பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட தானம் பிற்காலத்தில் கிராமம் என மருவி விட்டது... அதே போல சதுர்வேதி மங்கலம், பாண்டமங்கலம் என்று வேத பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களுக்கு பெயர் வைக்கப்பட்டது...
சோழர் ஆட்சிக்குப் பிறகான சித்தர் மரபு ஒரு சீர்திருத்த மரபாக உருவெடுக்கிறது... சித்தர்கள் சாதி, மதம் இனம், மொழி என வேற்றுமை பாராட்டாமல் வாழ்ந்த வைத்தியம் தெரிந்த தனிநபர்கள் என குறிப்பிடுகிறார்... கோயில் என்னும் அமைப்பையும், பார்ப்பனீய ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்ற சித்தர்கள் முகாலயர்களின் முற்றுகையினால் மறைந்து போகத் தொடுங்கினார்கள்... அதன் பிறகான விஜயநகரப் பேரரசு அதில் இருந்த தெலுங்கு பார்ப்பனர்களின் ஆதிக்கம் என நிறைய தகவல்கள் இந்த புத்தகத்தில் கொட்டிக் கிடக்கிறது! தமிழகத்தின் சமய வரலாற்றை பருந்துப் பார்வையாக தெரிந்து கொள்ள விரும்பகிறவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் சமயங்களின் அரசியல்!
புத்தகம் – சமயங்களின் அரசியல் ஆசிரியர் - முனைவர் தொ.பரமசிவன் பதிப்பகம் – வானவில் புத்தகாலயம் பக்கங்கள் - 152 விலை - ₹150
The book was awesome to know the evolution of every cult and the series of events that lead to the current scenarios. As usual tho.pa speaks about any incident with proper reference and concrete proofs. Always admire Tho.pa s as an anthropologist and his penchant for exploring to greater depth to its roots. Nice read altogether!
உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் பிறவா நிலை என்ற தேடலை மையப்படுத்தி கோட்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் போது, இந்தியாவில் தோன்றிய வைதீக வேத மரபானது பிறப்பை மையப்படுத்தி மக்களை அடிமைப்படுத்துதல் என்ற ஒற்றை கோட்பாட்டினை மறைவாக வைத்துக்கொண்டு காலத்திற்கேற்ப தன்னை உருமாற்றிக் கொண்டு சமூகத்தை எப்படி ஆழ நினைக்கிறது என்பதனை வெட்டவெளிச்சமாக விளக்கும் ஒரு நீண்ட கட்டுரை தொ.ப. ஐயாவின் 'சமயங்களின் அரசியல்'.
சமணம், பௌத்த மாதங்கள் நிறுவன மதங்களாக இருந்தாலும் அச்சமயங்களின் உணர்வுகள், மொழிவழியாகவோ பிற புறவழியாக தமிழ்நாட்டில் வெளிப்படவில்லை. இதுவே சைவ வைணவ சமயங்கள் இங்கு தலைதூக்கக் காரணமாக இருந்த ஒன்று என்பதனை நிறைய அறியா தகவல்கள் கொண்டு இந்த நீளமான கட்டுரை விளக்குகிறது.
சைவமும் வைணவமும் அரசு சார் மக்களிடம் நெருக்கமான உறவினை வைத்துக்கொண்டு மொழி வழியாகவும் பக்தி இலக்கியங்கள் வழியாகவும் தங்களை முதல் நிறுவன சமய இயக்கங்களாக நம் சமூகத்தில் காலூன்ற எவ்வளவு முயற்சி செய்தது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் நிறைந்து இருக்கும் கட்டுரை இது.
துறவை மையப்படுத்திய சமணம், வெகுசன மக்களிடம் நெருங்காமல், ஊர்களுக்கு ஒதுக்குப்புறமாக மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த அவர்களின் நிரந்தர வாழ்விடங்கள் அற்ற நிலை, சொத்துடைமை இல்லாமை போன்ற காரணங்களால் எளிய மக்களுக்கு இந்த சமயத்தைப் பின்பற்றுவது கடினமாக இருந்தது. மேலும், அவர்களின் நிர்வாண துறவு நிலை பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய ஒன்றாக இருந்ததினால் விரைவாகச் சமணம் வீழ்வதற்கு மற்றுமொரு காரணமாக இருந்தது என்பதை நாம் அறியமுடிகிறது. சமணம் கொண்ட அதே துறவு நிலை, மக்களோடு இணக்கமாக உறவு கொள்ளாமை மற்றும் பௌத்தம் கொண்ட கடுமையான தவ பயிற்சி முதலிய காரணத்தால் தமிழ்நாட்டில் பௌத்தம் நிலைகொள்ளவில்லை. இந்த இரண்டு சமயங்களின் வீழ்ச்சியின் காரணங்களைப் பயன்படுத்திக்கொண்ட சைவமும் வைணவமும் அந்த சமயங்களின் நேர்மாறான குடும்ப அமைப்பு முறை, சொத்துடைமை போன்ற கொள்கையினால் தமிழ் மக்களோடு இணக்கம் கொண்டது எனவும், மக்களின் இயல்பான வாழ்வியலைக் கடவுளோடு ஒப்பிட்டு இலக்கணம் செய்து, பாடல்கள் பாடி தங்கள் சமயத்திற்கு வலு சேர்த்தது என்பதனையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
ஆனால் சைவத்திற்கும், வைணவத்திற்கும் வேத பரப்புரையைக் கொள்கையாகக் கொண்ட வைதீக சமயமே பெரிய எதிரி என்பதனை விளக்கும் ஒரு சிறந்த கட்டுரை. வேதங்களை மரபாகக் கொண்ட வைதீகம் சைவ வைணவ சமயங்களிலும், அரசு உருவாக்கத்திலும் தனது கோட்பாடுகளைப் புகுத்திக்கொண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் உயிர் பிழைத்து சமூகத்தை அடிமைப்படுத்த நினைக்கிறது என்பதனை நாம் அனைவரும் அறிவது மிக அவசியம் என்பதை இந்த கட்டுரை உணர்த்தும்.
எவ்வளவு பெரிய சமயங்கள் வந்தாலும் சென்றாலும், தாய் தெய்வ வழிபாட்டு நெறியினை மையமாகக் கொண்ட தமிழ் நாட்டார் தெய்வ வழிபாடு அழியாது நிலைத்து வாழும் காரணங்களை அழுத்தம் திருத்தமாக தொ. பரமசிவன் ஐயா பதிவு செய்திருக்கிறார் இக்கட்டுரையில்.
இந்த புத்தகத்தின் பின்னிணைப்பான தொ.ப ஐயா மற்றும் சுந்தர் காளி அவர்கள் இருவரின் 'சமயம் ஒரு உரையாடல்' நம்மிடம் இருக்கும் சமயம் சார்ந்த நிறையக் கேள்விகளுக்கு விடை தரும் பக்கங்களாக அமைத்திருக்கிறது.
சமய நம்பிக்கை உள்ளோர், சமய நம்பிக்கை இல்லாதோர், என அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் 'சமயம் ஒரு அரசியல்'
The Tamil Anthropologist Tho. Paramasivan has once again presented a large volume of information in a very concise manner. The book moves on a timeline how various religious movements developed and flourished in the land of Tamils. Would recommend for people interested in knowing the religious demography of present-day Tamil Nadu.
சமயம் மீது ஆர்வமுள்ளவர்கள் சமயங்கள் பற்றி அறிந்து கொள்ள ஒரு சிறந்த நூல். நூலில் இருந்து சமயம் பற்றி பல விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.தொ.ப வின் எழுத்துக்கள் நம் இன்றைய சமூகத்திற்கு மிகவும் வேண்டியவை.⠀
தொ.ப நம் காலத்தின் தேவை. ஒற்றை மொழி, கலாச்சாரம், நாடு என்ற பன்மியத்திற்கு எதிரான பேராபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டிய கருத்தியல் ஆயுதத்தை தரவல்லதே இப்புத்தகம். தொ.ப அவர்களின் நூல்கள் அனைத்தையும் மீள்வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன், ஒவ்வொரு முறையும் அவை வெவ்வேறு பரிமாணங்களை தந்து கொண்டிருக்கின்றது. பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்களுடைய புத்தகங்களை, தொ.ப அவர்களின் படைப்புக்களோடு உடன் வாசிப்பு செய்யும்போது புதிய வெளிச்சம் கிடைக்கின்றது.
சிறப்பான ஆராய்ச்சி நூல். பல்வேறு காலகட்டங்களில் தமிழகம் எவ்வாறு இருந்திருக்கிறது, குறிப்பாக சைவம், வைணவம், சமணம் மற்றும் பெளத்தம் ஆகியவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன என்பன குறித்த முழுமையான ஒரு சித்திரத்தை இவ்வாசிப்பு அளிக்கிறது. தொ.பவின் அறியப்படாத தமிழகத்தைக்காட்டிலும் இது சிறப்பான நூல்!
வைதீகம் எனும் ஆரியம் பிற சமயங்களை எப்படித் தன்னுள் கரைத்துக் கொண்டது எனும் ஆயிரத்தைநூறாண்டு வரலாற்றினைத் தெளிவாய் எடுத்துரைக்கிறது இந்நூல். யாகங்கள் என்று சொல்லப்படும் வேள்விகள் செய்வது ஆரியர் வழக்கேயாகும். இப்படி ஆரியர் வேள்விகள் செய்வதைப்பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் ஒருசில இடங்களில் காணப்படுகின்றன. அதன் மூலம் சங்கக் காலத்திலேயே சிறிதளவில் ஆரியர் தமிழகத்தில் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆரியர்க்கு சமற்கிருதத்தில் வழங்கப்பட்ட வேதங்களே முதன்மையானவையாகும் கடவுளைக் காட்டிலும் வேதங்களையே மேன்மையானவையாய்க் கருதினர். அவ்வேதங்களே பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வைப் போதித்தன. அதனால் வேதங்களைப் பிறர் காதுபட சொல்வதையேகூட பாவச்செயலாய்க் கருதினர். நாங்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்றும் சமற்கிருதம் தேவமொழி என்றும் கூறி பிறரை நம்ப வைத்து ஆரியர் வந்து வேள்வி நடத்துவதனால் நாட்டிற்கு நன்மைகள் நடக்கும் என்று மன்னரையும் மக்களையும் நம்ப வைத்தனர். இதன் மூலம் அரண்மனைகளிலேகூட வேத மந்திரஞ் சொல்லி வேள்விகள் நடத்தலாயினர், இதற்கு ஈடாய்த் தங்கத்தையும் நிலத்தையும் பெற்றனர். இப்படி க்ரமம் எனப்படும் வேதத்தைச் சொல்லிப் பெறப்பட்ட நிலங்களே பின்னாளில் கிராமம் என்றானது. இப்படியே மெல்ல அதிகாரத்தின் அங்கமாய் ஆயினர். இதன்பிறகு அரண்மனைகளிலிருந்து ஆரியரும் சமற்கிருதமும் கோவிலுக்குள் நுழைகின்றனர். இதுவே இறைவழிபாட்டிலிருந்து தமிழை விலக்குவதற்கான முதற்கட்டமாகும். ஆரியர் வருகைக்கு முன்னர் வட்ட வடிவிலான கோட்டம் எனப்படும் திறந்தவெளியிடங்களே இறைவழிபாட்டிடங்களாய் இருந்தன. பின்னரே அவை கருவறை கொண்ட கோவில் ஆகின்றன. வெளி கருவறையான பின்பு கருவறைக்குள் சமற்கிருதமே ஒலிக்க வேண்டும் எனச்சொல்லி தமிழை வெளியேற்றினர். இதனால்தான் இன்றும் தேவாரம் பாடும் ஓதுவார் கருவறைக்கு வெளியில் இருக்கும் மண்டபத்தில் மட்டுமே நின்று பாடுகின்றனர். இப்படி கோவிலுக்குள் நுழைந்ததன் வழி சைவத்தையும் வைணவத்தையும் மெல்ல தன்னுள் கரைத்துக் கொள்ளத் தொடங்கிய வைதீகம் தமிழகத்தில் பெருகிவந்த சமணத்தையும் பௌத்தத்தையும் அவைதீக சமயங்கள் என்று கூறி எதிர்த்தது. ( இன்றைய இந்து மதம் கூட சைவம் மற்றும் வைணவம் எனும் இரு சமயங்களின் வைதீகக் கலப்பே ). காலத்தின் கட்டாயத்தால் சமணமும் பௌத்தமும் பெருகமுடியாமல் கரைகின்றன. சித்தர்கள் எனும் தமிழ் மரபினர் ஆரியத்துக்கு எதிரான கலகக்குரலினை எழுப்புகிறார்கள். பின்வரும்படி பாடல்கள் மூலம் தம்மெதிர்ப்பைக் காட்டுகிறார்கள்,
இதனுடன் சித்த மருத்துவம் மூலம் மக்களுடன் நெருங்கியவர்களாகவே இருக்கின்றனர்.
பின்னர் பல படையெடுப்புகளால் அரசுகள் வீழ்கின்றன சித்தர் மரபு மறைகிறது மாற்றங்கள் நடக்கின்றன ஆனால் ஆரியர் மட்டும் சமூகத்தில் தாம் வகித்த உயர்நிலையைத் தக்கவைத்துக் கொண்டே இருந்துள்ளனர். இது வியப்புக்குரிய ஒன்றாகும்.
பின்னர் இசுலாமும் கிறித்துவமும் தமிழ் மண்ணில் பரவுகின்றன. பிறப்புவழி ஏற்றத் தாழ்வுக் கொடுமையில் தத்தளித்த தமிழ் மக்கள் பலர் இவ்விரு சமயங்களையும் சென்றடைகின்றனர். அப்போதும் சாதியமைப்பை நீங்களும் பின்பற்ற வேண்டும் என்று கிறித்துவ மதமாரிடம் சொல்கின்றனர். அவர்கள் ஆனால் அதை ஏற்க மறுக்கின்றனர் ஆரியர்.
பின்னர் வெள்ளையர் வ���ுகைக்குப் பின் தங்கள் மேன்மைக்கு வழிவகுப்பது இந்தியத் தேசியமே என்று முடிவு செய்து தேசிய இயக்கத்துள் தம்மைக் கரைத்துக் கொள்கின்றனர். ( இதைப்பற்றி விரிவாய் அறிய தொ.ப அவர்கள் எழுதிய இந்தியத் தேசியத்தில் பார்ப்பனியத்தின் பங்கு எனும் நூலைப் படிக்கவும்).
புத்தகம்: சமயங்களில் அரசியல் ஆசிரியர்: முனைவர் தொ.பரமசிவன்
சமயங்களில் அரசியல் என்ற இந்த சிறிய புத்தகம் தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் இயக்கங்களான சமயங்கள் குறித்து விரிவாக அலசி ஆராய்கிறது.
முதல் முதலாக தோன்றிய இயக்கத்தை பக்தி இயக்கம் என்று சைவம் வைணவம் பற்றி குறிப்பிடுகிறார்.
சமண பௌத்த மதங்களை எதிர்த்து அவற்றின் செயல்பாடுகளை பக்தி இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வாயிலாகவும் பிற ஆய்வாளரின் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள மேற்கோள்கள் மூலமாக விளக்குகிறார்.
அரசதிகாரத்தின் ஆதரவு பெற்ற சமயங்கள் எப்போதும் அந்தந்த காலகட்டத்தில் முதன்மையானதாக இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இன்று வரை!
சடங்கில் உரிமைகள் பெண்களிடம் இருந்தது போன்ற தகவல்கள் புதிதாக இருந்தது. வட்டவடிவான கோட்டங்களே நம் பழந்தமிழ் வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது.பௌத்ததின் தாக்கமே இன்று நாம் வழிபடும் சதுர அல்லது நீள் சதுர வடிமான கோவில்களின் அமைப்புக்கள்.
நான் பார்த்த வரை பெங்களூரில் வசித்த சமயங்களிலும்,பின் வடமாநிலங்களிலும் கர்பகிரத்திற்குள் செல்வதோ,தெய்வத்தின் சிலைகளை தொட்டு வழிபடவோ பொதுவாக பெண்களுக்கு தடையில்லை என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
தீட்டு போன்றவைகள் உருவாக்கப்பட்டது நம் தமிழகத்தில் பக்தி இயக்க காலத்தில் தான். பார்ப்பனியம் அரசதிகாரத்தோடு உள்நுழைந்து பிற சாதியினரையும் பெண்களையும் கர்பகிரக வழிபாடுகளில் இருந்து விலக்கியுள்ளது.
அதன் கட்டுகளில் இருந்து இன்னும் விடுபடாமல் தான் நாம் இருக்கிறோம் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
நாட்டார் தெய்வ வழிபாடுகளை புறந்தள்ளியதில் வைணவத்தின் தாக்கம்,மூதேவி வழிபாடு நிறுத்தப்பட்டது, திருவிளக்கு வழிபாடு,சமண பௌத்த மதங்களுக்கு எதிரான பக்தி இயக்கங்களின் தாக்கம் போன்றவற்றை விரிவாக விவரிக்கிறார் தொ.ப.
சைவம் வைணவம் என்று பக்கம் பக்கமாக விரிந்த தகவல்கள் எதுவும் பெரிதாக ஆர்வம் ஏற்படுத்தாதது, எனக்கு இவற்றை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமையே.
ஆனால் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கடற்கரையோரங்களில் நிகழ்ந்த கிருத்துவ மதமாற்றம். இஸ்லாமிய மதம் மாற்றத்தின் காரணங்கள், எங்கள் ஊர் பக்கங்களில் கிருஸ்துவ தேவாலயங்கள்,வேதக்கோவில்கள் என்று அழைக்கப்படுவதற்கான காரணங்கள் ஆகியவை சமகால சமூகத்தில் காணப்படும் நான் அறிந்து கொள்ள விளைந்த விஷயங்கள். ஆனால் அவை புத்தகத்தில் ஒரு சிறிய பகுதியாக மட்டுமே இருந்தது.
சமயங்களை குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக வாசிக்கலாம்.
பேராசிரியர் தொ. பரமசிவனின் இன்னொரு அருமையான நூல். இந்தப் பதிப்பு சமயங்களின் அரசியல் என்ற நூலையும் அவருக்கும் சுந்தர் காளிக்கும் இடையே நடந்த சமயம் பற்றிய உரையாடலையும் சேர்த்தது.
சமயங்களின் அரசியல் என்ற நூல், மிக குறுகிய பாகமாக இருந்தாலும் முக்கியமான ஆய்வாக அமைகிறது. தமிழகத்தில் பக்தி இயக்கம் அமைந்த விதமும் அதன் தாக்கத்திலிருந்தும் தொடங்குகிறது நூல்.
சில வியப்பான உண்மைகளை உணர்ந்தேன் இந்நூலின் மூலம். சமய குரவர்களில் என்னை மிகவும் ஈர்த்தவர்கள் அப்பரும் மாணிக்கவாசகரும் தான். சிறு வயதில் நான் தேவாரம் பொருள் கற்கும் போது சம்பந்தர் சொன்னது பிடிக்காததாக நியாபகம். சம்பந்தர் சொன்ன வைதீக கருத்துக்களும் கோத்திரப் பெருமையும் அப்பர் எழுப்பிய புரட்சிக் குரலையும் ஆராய்கிறார் ஆசிரியர். இது ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டம். இதில் ஒரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் அப்பரும் சம்பந்தரும் ஒரே காலத்தில் வாழவில்லை என ஆசிரியர் முனைகிறார். இதில் உண்மை இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகின்றது.
சமஸ்கிருதம் காலப் போக்கில் வளராமல் கோயிலுக்குள் மட்டும் வாழும் காரணமும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் நோக்கி வந்த பிராமணர், பெண்களைக் கொணராமல் தமிழ்ப் பெண்களை மணந்ததால் வீட்டில் தமிழ் தான் பேசப்பட்டதாம். இதனால் தமிழகத்தில் சமஸ்கிருதம் வளரவில்லை.
கோயில்களின் செயற்பாட்டு பரிணாம வளர்ச்சி, அதிகார மையங்களாக இயங்கியமை என்ற ஆய்வும் சுவாரசியமானது. விஜயநகர ஆட்சியின் போது கோயிலமைப்பில் நடந்த மாற்றங்களும் விவரிக்கப்பட்டுள்ளது.
என்னை ஈர்த்த இன்னொரு ஆய்வு, பௌத்தமும் சமணமும் ஆணாதிக்கத்தை எப்படி வெளிப்படுத்தின மற்றும் தமிழகம் அம் மதங்களை நிராகரிக்க அமைந்த காரணங்கள் என்பது.
ஆழ்வார்கள் பற்றிய வரலாறு, உரத்தின் தெய்வமாகிய மூத்த தேவியின் வரலாறு, சமணரின் தலைவி வெண்ணாடை அணிந்த சரஸ்வதி ஆன விதம் எனச் சுவையான விடயங்கள் உண்டு.
சமயங்கள் பற்றிய பலவிதமான உண்மைகளை ஆய்வுகளின் மூலம் விளக்குகிறது இந்நூல். இன்று நடைமுறையில் இருக்கும் மதங்களின் வரலாற்றை ஆராய்ந்து உண்மைகளை நமக்கு விளக்குகிறது.
This book gives a good account on how the people and the politics got affected by the involvement of various practices followed in a time period.
How the hindu religious practices by bhakthi marg welcomed and cherished while Buddhism and Jainism lost it traction . Hindu way of worshipping god gave space to the people to include their age old practices while the others denied doing such things. The worshipping was associated with male in other religions while bhakthi marg include female into the main picture.
Staunch following of not consuming meat and palm wine by the other religion is not welcomed by tamil people.
The rulers themselves followed either siavam or vainavam which leads the people to follow the same.
சமயங்களின் அரசியல் #முனைவர்.தொ.பரமசிவன் #வானவில் புத்தகாலயம் இந்த வருட புத்தகக் கண்காட்சியில் வாங்கிய கட்டுரை தொகுப்பு . ஏராளமான தகவல்களும் ,சமயங்களில் பொதிந்திருக்கும் அரசியலும் நம்மை அதிர செய்கின்றது. ஒரு சமய சார்பின்றி இந்த கட்டுரையை எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பதை போன்றது அதை லாவகமாக கையாண்டுள்ளார். நாட்டார் தெய்வங்கள் பேசும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான சமய உரிமைகள் சிறப்பு . இந்த புத்தகத்தை படிக்கும் போது நம்மை அறியாமல் பராசக்தி படத்தின் வசனம் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாதது.. தொ .ப வின் நூல்கள் சமய குட்டையில் கல் எறியும் என்ற நினைப்புடன் வாசிக்க துவங்கியது ஒரு பெரும் பாறாங்கல் விழுந்த உணர்வுடன் முடிந்தது..
A comprehensive understanding of Tamil nadu religions and Tamil Language . The author explain in a simple language the importance played by Samana, Budha religions before the advent of Siva and Vaishnav religions in TN , why the Chola empire fallen and what the damage done by Vijayanagara period after 12 th century to Tamils and Tamil language
T.Paramasivan does a great job in researching about old customs, religions, tradition, practices, and mainly the politics behind religions.. Was interesting to read. Great source of knowledge.
Books like these shake the core principles of strong guman beliefs. It gives us a chance to contemplate and question the practices we follow. Highly grateful to have read this book. A real eye-opener.
வெகுநாட்களுக்கு பிறகு மிக ஆர்வமாக படிப்பது ஆசிரியர் தொ.ப. வின் எழுத்துக்களைதான். தற்போது தமிழகத்தில் நிலவும் ஒரு அசாதாரண சூழலில், நம் வரலாற்றை பண்பாட்டை இழக்காமலிருக்க இது போன்ற வரலாற்று ஆய்வுகள் தேவைப்படுகிறது.